சிறப்பு அந்தஸ்து பெற்றால் அண்ணா பல்கலைக்கழகம் என்ன ஆகும் ?

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழத்திற்கு ” Institutes of Eminence ” எனும் சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பான பிரச்சனை சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கடந்த ஜூன் 2-ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதத்தால், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக விவாதமாகியது. துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடு குறித்தும், அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற்றால் என்னவாகும் என யூடர்ன் வெளியிட்ட வீடியோவின் ஆதாரத் தொகுப்பை இங்கு காணலாம்.
2018-ல் கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அதன்பின்னர், சூரப்பாவிற்கும் தமிழக அரசிற்கும் உரசல்கள் இருந்து வந்தன. கோவிட்-19 பாதிப்பு காரணமாக கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபோது, அதற்கு எதிராக சூரப்பா ” இது சாத்தியமில்லை. இதை AICTE அனுமதிக்காது ” எனக் கூறி இருந்தார். உயர்மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் கூட AICTE ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியாது என கூறப்பட்டது.






அவர் கூறுகையில், ” மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், கல்வி கட்டண வரையறை போன்ற கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் நிதி நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் முழு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதால் மாநில அரசு பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற சட்டத்தின் படி தான் இடஒதுக்கீடு இருக்கும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு 9-வது அட்டவணையில் சேர்க்க பட்டிருந்தாலும், முழு தன்னாட்சி அதிகாரம் மாணவர் சேர்க்கையில் வழங்கப்படுவதால் நாளை 69% இடஒதுக்கீட்டை மீறும் நிலை ஏற்படலாம். மேலும், பிற மாநில மாணவர்கள் சேர்க்கைக்கு எந்த உச்ச வரம்பும் குறிப்பிடப்படாததால், தற்போதுள்ள இடங்களையே தமிழக மாணவர்கள் இழக்க நேரிடும். பின் எவ்வாறு 69% இடஒதுக்கீட்டை உறுதி படுத்தமுடியும்?
நீட் தேர்வில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர் (OBC) இடஒதுக்கீடு மத்திய அரசால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. மத்திய அரசு பொய்யான வாக்குறுதியை நமக்கு அளித்துவிட்டு நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வாதாடி இரட்டை வேடம் போட்டதை நாம் கண்டோம்.
இவ்வாறான மோசமான அனுபவங்களால் தான் மாநில அரசு எழுத்து வடிவில் தெளிவாக தமிழ் நாடு அரசின் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படாது என்ற உத்திரவாதத்தை அளிக்க சொல்லி கேட்டது. ஆனால் அவ்வாறான எந்தவொரு உத்திரவாதத்தையும் அளிக்காத மத்திய அரசை எவ்வாறு நம்ப முடியும்? ” என கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களில் ” Shall ” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுவாக சட்டங்களில் பயன்படுத்தப்படும் “Shall” என்ற வார்த்தையை நீதிபதிகள் வழக்கின் தன்மையை கணக்கில் கொண்டு ஒன்றை செயல்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவிற்கு வரலாம். அதாவது ” Shall ” என்றால் கட்டாயம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. இதை வைத்து பார்க்கும் பொழுது “shall implement the reservation policy” என்பது நீதிபதியின் புரிதலுக்கு உட்பட்டது. கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியை இந்த வார்த்தை அளிக்கவில்லை. உதாரணத்திற்கு- https://indiankanoon.org/doc/849736/

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.