அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட் உரையாடல் வைரல் விவகாரம் !
டி.ஆர்.பி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்கின்(BARC) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த வாட்ஸ்அப் உரையாடல்களின் திரைக்காட்சிகளை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெள்ளிக்கிழமை பகிர்ந்துள்ளார்.
These are a few snapshots of the damning leaked WhatsApp chats between BARC CEO & #ArnabGoswami. They show many conspiracies&unprecedented access to power in this govt; gross abuse of his media&his position as power broker. In any Rule of law country, he would be in jail for long pic.twitter.com/6aGOR6BRQJ
— Prashant Bhushan (@pbhushan1) January 15, 2021
கடந்த ஆண்டு அக்டோபரில் ரிபப்ளிக் டிவி உட்பட சில தொலைக்காட்சி சேனல்கள் தங்களது டிஆர்பி எண்களை மோசடி செய்கின்றன என்று குற்றம்சாட்டி, ஹன்சா ஆராய்ச்சி குழு மூலம் பார்க் புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டார்.
மும்பை காவல்துறையினரின் கூற்றுப்படி, பார்த்தோ தாஸ்குப்தா தனது உத்தியோகபூர்வ நிலையை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் டிஆர்பி மதிப்பீடுகளை கையாள்வதற்கும் ரிபப்ளிக் டிவியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கும் தொடர்பு கொண்டார். 2017-ல் ரிபப்ளிக் டிவி தொடங்கப்பட்டதில் இருந்து தாஸ்குப்தாவுக்கு பெரும் தொகையை செலுத்தியதாகவும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். டி.ஆர்.பி வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக ஆதாரம் கிடைத்தது.
ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் சமீபத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா உள்ளிட்ட சில செய்தி சேனல்கள் டி.ஆர்.பி சேதப்படுத்தியது தொடர்பான விசாரணையில் மும்பை காவல்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் திரு. தாஸ்குப்தாவின் தொலைபேசி வழியாக 1,000 க்கும் மேற்பட்ட பக்கங்களில் டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள் கசிந்து உள்ளன.
அதில் பதிவாகிய சிலவற்றை காணலாம்,
பொதுத் தேர்தல்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 4, 2019 அன்று, திரு. தாஸ்குப்தா, திரு. கோஸ்வாமியிடம், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்மொழிவை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சேனல்கள் தரவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டால், பல சேனல்களை மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்கள் (எம்.எஸ்.ஓக்கள்) மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் (எல்.சி.ஓக்கள்) இருட்டடிப்பு செய்யலாம் என்று திரு. தாஸ்குப்தா அவர்களிடம் கூறப்பட்டு இருந்தது.
“பொது தரவுகளுடன் எம்.எஸ்.ஓக்கள் மற்றும் எல்.சி.ஓக்கள் உங்களை அதிக சிக்கலில் தள்ளும்” என்று திரு. தாஸ்குப்தா திரு. கோஸ்வாமியிடம் கூறுகிறார்.
இந்த நேரத்தில், திரு. கோஸ்வாமி அவருக்கு பாஜக அரசு திரும்பும்போது, TRAI-க்கு அதிகாரம் இருக்காது என்று உறுதியளிக்கிறார். இந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு அரசாங்கத்தை அரசியல் ரீதியாக பாதிக்கக்கூடும் என்பதற்கான புள்ளிகளை தனக்கு அனுப்புமாறு அவர் திரு. தாஸ்குப்தாவிடம் கேட்டார்.
“சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதால், டிவியில் செய்தியிடலின் தாக்கம் குறைவான மக்களைச் சென்றடையும், எனவே நீர்த்த தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று திரு. தாஸ்குப்தா பதிலளித்தார்.
திரு. தாஸ்குப்தாவும் பல இடங்களில் “சொந்த நலன்களின்” அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக புகார் அளித்துள்ளார். பார்வையாளர் தரவுகளில் பல்வேறு சேனல்களின் அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஒரு கட்டத்தில் அவர் திரு. கோஸ்வாமிக்கு பிரதமர் அலுவலகத்தில் “ஊடக ஆலோசகராக” ஒரு வேலையைப் பெறும்படி கேட்கிறார்.
திரு. கோஸ்வாமி “பி.எம்.ஓ” மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அருகாமையில் இருப்பதைப் பற்றி பெருமையாகக் காட்டும் பல நிகழ்வுகளும் டிரான்ஸ்கிரிப்ட்களில் உள்ளன. அவர் பல்வேறு அமைச்சர்களைச் சந்திக்க டெல்லிக்குச் சென்றதை விவரிக்கிறார். “எல்லா அமைச்சர்களும் எங்களுடன் இருக்கிறார்கள்” என்று அவர் சொல்லும் மற்றொரு பதிவும் உள்ளது.
மற்ற உரையாடல்களில், திரு. கோஸ்வாமி தனது தொலைக்காட்சியை விட மற்ற செய்தி சேனல்களுக்கு சிறந்த மதிப்பீடுகளைப் பெறுவதாகவும் புகார் கூறுகிறார், மேலும் “தரவை சரி செய்ய” தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திரு. தாஸ்குப்தா அவருக்கு உறுதியளிக்கிறார்.
பிப்ரவரி 26, 2019 அன்று, பாலக்கோட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாமை குறிவைத்து இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், பிப்ரவரி 14, 2019 அன்று பயங்கரவாதிகள் இந்தியாவின் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிரிழப்பிற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பாக தாஸ்குப்தா உடன் நடந்த உரையாடல் டிரான்ஸ்கிரிப்ட்டில்,
அர்னாப் கோஸ்வாமி : “சாதாரண தாக்குதலை விட பெரியது. அதே நேரத்தில் காஷ்மீரில் ஏதோ பெரிய விஷயம். பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதலுக்கு மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது ” என இடம்பெற்று இருக்கிறது.
தொலைக்காட்சி மதிப்பீடுகள் புள்ளி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் தாக்கல் செய்த 3,400 பக்க துணை குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியான டிரான்ஸ்கிரிப்ட்டில் இந்த உரையாடல் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தி இந்து தெரிவித்துள்ளது.
Links :
WhatsApp transcripts reveal BARC chief Partho Dasgupta’s links with Arnab Goswami