சிபிஎஸ்இ தேர்வில் பெண்களை இழிவு செய்யும் கேள்வி, எதிர்ப்பால் பின்வாங்கியது !

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கேள்வித்தாளில் பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இடம்பெற்ற கேள்வி பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றது. அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பால் சிபிஎஸ்இ பின்வாங்கி உள்ளது.
சிபிஎஸ்இ தேர்வில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் இடம்பபெற்ற சொற்றொடரில், ” மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது என்பதை மக்கள் வெகுவாக கவனிக்கிறார்கள். மனைவிகள் தங்கள் கணவனுக்கு கீழ்ப்படிவதை நிறுத்தவிட்டார்கள். அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்கமின்மைக்கு முக்கிய காரணம்.
Unbelievable! Are we really teaching children this drivel?
Clearly the BJP Government endorses these retrograde views on women, why else would they feature in the CBSE curriculum? @cbseindia29 @narendramodi?? pic.twitter.com/5NZyPUzWxz
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 13, 2021
Appalling. This appeared in CBSE Class 10 exam today. How can something so regressive even be said about women? Or is CBSE simply endorsing Modi govt’s views about women? “Children and servants are indisciplined because wives stopped obeying their husbands” sick pic.twitter.com/znN65f6nAS
— Supriya Shrinate (@SupriyaShrinate) December 12, 2021
This outrageously nonsensical reading passage appeared in the 10th CBSE board exam paper today. What are we teaching our children? CBSE has to give an explanation and tender an apology for inflicting our children with this.@Jairam_Ramesh @jothims @kavithamurali
Extracts follow+ pic.twitter.com/QInuqaBAaE— Lakshmi Ramachandran (@laksr_tn) December 11, 2021
இதுதொடர்பாக, மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதுபோன்ற கருத்துக்களை உடனடியாக கேள்வித்தாளில் இருந்து நீக்க வேண்டும், மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
#WATCH | Congress interim chief Sonia Gandhi raises in Lok Sabha the issue of inclusion of a ‘shockingly regressive passage’ in CBSE’s question paper for Grade 10 exam, demands withdrawal of the passage & apology
(Source: Sansad TV) pic.twitter.com/lO1Db4ty3q
— ANI (@ANI) December 13, 2021
இந்நிலையில், தேர்வுத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி குறித்து பாடக்குழு வல்லுநர்களிடம் ஆய்வு செய்ய ஒப்படைக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்ணும் அளிக்கப்படுவதாகவும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு முதல்பருவ தேர்வு – ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பது பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்களை பாடுபட்டு கொண்டிருப்பவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. pic.twitter.com/dKr6hCPfrd
— O Panneerselvam (@OfficeOfOPS) December 14, 2021
” பெண்களை இழிவுப்படுத்தும் கேள்வி தொடர்பாக சிபிஎஸ்இ விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அந்த வினா நீக்கப்பட்டு, அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்குவதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கிறது. இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதை போல் உள்ளது ” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வுத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் கேள்விகள் இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பாக, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு சமூகவியல் பாடத் தேர்வில், ” குஜராத்தில் 2002ம் ஆண்டு முன் எப்போது இல்லாத அளவிற்கு முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை எந்த அரசியல் கட்சி ஆட்சியில் நடைபெற்றது ” என சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Links :
What all was wrong in the passage on women in CBSE’s English question paper?