5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு.

இந்தியா முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தி பதிவிடப்படுகிறது.
தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால், தமிழகத்திலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன என்பதை சமகால நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.
பொதுத் தேர்வுகள் அதிகரிப்பு மாணவர்கள் பள்ளி படிப்பை தொடராமல் இருக்கச் செய்யும் காரணங்களாக மாறக்கூடும்.
இந்திய அளவில் 12-ம் வகுப்பு வரை பள்ளி படிப்பை முழுமையாக முடிப்பவர்களின் சதவீதத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. அங்கு 30 % மாணவர்கள் மட்டுமே இன்றும் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்கின்றனர். 70% மாணவர்கள் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் உள்ளனர்.
இது தொடர்பான பல தகவல்கள் வீடியோவில்,
ஆதாரங்கள் :
Cops ‘study’ dropouts to curb crime
Crime data: Snatchers arrested in Delhi mostly first timers, school dropouts
What is the dropout rate among schoolchildren in India?
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.