அரசுப் பேருந்துகள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை : அமைச்சர் சிவசங்கர் !

நஷ்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துத்துறையை சமாளிக்க திமுக தலைமையிலான தமிழக அரசானது போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க கொள்கை முடிவு எடுத்து இருப்பதாகவும், முதல் கட்டமாக சென்னையில் 1,000 பேருந்துகளை இயக்க தனியாரை அனுமதிக்க ஏற்பாடு நடக்கிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் 25 சதவீத பேருந்து போக்குவரத்து தனியார்மயமாக்கப்படும் என போக்குவரத்து வட்டாரத் தகவல் தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன்பாக தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.

Twitter link 

அரசுப் போக்குவரத்தை தனியார்மயமாக்க போவதாக ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து, தமிழக பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மேலும், அரசுப் பேருந்துகளை தனியாவசம் போக அனுமதிக்கக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், அரசுப் பேருந்து இயக்கம் தனியார்வசம் போவதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ” தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாரை அனுமதிக்கும் எந்த திட்டமும் இல்லை. அரசுப் பேருந்துகள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசுக்கு இருக்கும் நற்பெயரை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் ” எனத் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க : மே 18 முதல் உயரும் பேருந்து கட்டண விவரங்கள் எனப் பரவும் செய்தி உண்மையா ?

இதற்கு முன்பாக, கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், புதிய பேருந்து கட்டணத்தின் விலைப்பட்டியல் என பழைய விலைப்பட்டியல் ஒன்றை வதந்தியாகப் பரப்பி இருந்தனர். அப்போதும், அது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




Back to top button
loader