சவுக்கு சங்கருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை வழக்கில் யாருக்கு ஆதரவாக ஆஜரானார் தெரியுமா?

யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில், பெண் காவலர்கள் பதவி உயர்விற்காக மூத்த அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொள்வதாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கடந்த 4ம் தேதி சவுக்கு சங்கரை தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து கைது செய்தனர். 

மேலும் தேனியில் இவரை கைது செய்யும் போது கஞ்சா வைத்து இருந்ததாக  தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையும் ஒரு வழக்குப் பதிந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு மே 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் என்பவர் ஆஜராகி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் அதிமுக-வை சேர்ந்த வழக்கறிஞர். 

கோபால கிருஷ்ணன் இதற்கு முன்னர் பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுகைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரானவர் என திமுக ஆதரவாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Archive link 

இது குறித்து தேடியதில் பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவே கோபால கிருஷ்ணன் ஆஜராகியுள்ளார் என்பதை அறிய முடிந்தது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக அளிக்கப்பட்ட புகார், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ 2019, மார்ச் 12ம் தேதி ’தந்தி டிவி’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

மேலும் பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக பிபிசி தமிழ் கோபால கிருஷ்ணனை  தொடர்பு கொண்டு பேசியது கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அவர் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக ஆஜராகி இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், தற்போது சவுக்கு சங்கருக்கு ஆதரவாக இவர் ஆஜரானதும் தவறான தகவலுடன் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader