This article is from Dec 26, 2018

15,000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சுலகிட்டி நரசம்மா காலமானார்

1920-ம் ஆண்டில் பிறந்த சுலகிட்டி நரசம்மா கர்நாடகாவின்  தொலைதூரக் கிராமமான கிருஷ்ணபுரத்தில் 15,000 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்தவர்.

பிரசவம் பார்ப்பதை சேவையை செய்து வந்த சுலகிட்டி நசரம்மா 2018  மார்ச் 20-ம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2014-ல் தும்கூர் பல்கலைக்கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதை இலவசமாக செய்து வந்துள்ளார். இந்தக் கலையை தன் பாட்டியிடம் கற்றதாக கூறியிருப்பார்.

98 வயதான சுலகிட்டி நரசம்மா டிசம்பர் 25-ம் தேதி பெங்களூரில் இயற்கை எய்தினார்.

Padma Shri awardee Sulagitti Narasamma passes away at 98 

Please complete the required fields.




Back to top button
loader