This article is from Jan 12, 2018

பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிப்பு.

பரவிய செய்தி

தமிழக அரசின் 2017 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்ந்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

அதில், 2018 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் கோ.பெரியண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது டாக்டர் சகோ.ஜார்ஜ் ஜே.கே க்கு வழங்கப்பட உள்ளது.

இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். விருது பெறுவோர்க்கு ஒரு லட்ச ரூபாய்கான காசோலையும், ஒரு சவரன் தங்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்பிப்பார்.

Please complete the required fields.




Back to top button
loader