டொனால்டு ட்ரம்ப் அதிபரானது முன்கூட்டியே கணிக்கப்பட்டதா ?
பரவிய செய்தி
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவர் வெற்றி பெற்ற பகுதிகளின் விவரங்கள் வரை அனைத்தும் 2000-ம் ஆண்டிலேயே Simpsons கார்ட்டூன் தொடரில் இடம்பெற்றுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுவது ஜூன் 15, 2015-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. ஆனால், ட்ரம்ப் உரையாற்றுவது தொடர்பான காட்சிகள் Simpsons தொடரில் “ trumptastic voyage” என்ற தலைப்பில் ஜூலை 7, 2015-ல் வெளிவந்தது.
விளக்கம்
Fox Animated series-ன் The Simpsons கார்ட்டூன் தொடரில் வருங்காலத்தில் நடைபெற உள்ள பல நிகழ்வுகள் முன்பே நேர்த்தியாக கணிக்கப்பட்டு கூறப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் அதன் படங்கள் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது 2000-ம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டு விட்டதாகக் கூறி பரவி வருகிறது. மேலும், இதை தொடர்புப்படுத்தி வருடங்களை மட்டும் மாற்றி பல்வேறு மீம்கள் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது.
ட்ரம்ப் அதிபர் ஆனது | ஜனவரி 20, 2017 |
ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது | ஜூன் 15, 2015 |
simpsons கார்ட்டூன் ஒளிபரப்பப்பட்டது | ஜூலை 7, 2015 |
ஜூன் 15, 2015-ல் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கபட்டு நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவரில் உரையாற்றியதை 2000/2006 ஆண்டிலே கணிக்கபட்டதாகக் கூறுவது தவறு. கார்ட்டூன் வடிவில் ட்ரம்ப் உரையாற்றுவது தொடர்பான காட்சிகள் ஜூலை 7, 2015-ல் simpsons தொடரில் “ trumptastic voyage” தலைப்பில் “அனிமேஷன் டோனிமேஷன் ” என்ற “youtube channel”-ல் வெளியானவை. அவற்றை பயன்படுத்தி வதந்தியை பரப்பியுள்ளனர்.
மேலும், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பகுதிகளின் விவரங்கள் உள்ளடக்கிய “ எலெக்ட்ரோல் ” வரைபடமும் தவறானவையே ஆகும். முன்பே கணிக்கப்படதாகக் கூறும் வரைபடத்தில் விஸ்கான்சின், ஒஹியோ, பென்சில்வேனியா போன்ற பகுதிகள் நீள நிறத்தில் உள்ளன. ஆனால், உண்மையான வரைபடத்தில் அவை சிகப்பு நிறத்தில் உள்ளன. வெர்ஜினியா மாநிலம் சிகப்பாக தவறாகக் காண்பிக்கப்பட்டது. அவை 2016-ல் நீள நிறம் ஆகும். சிகப்பு நிறம் ட்ரம்ப் வெற்றி பெற்ற பகுதிகளை குறிக்கின்றது.
உலகில் நடைபெறும் நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிலரால் கணிக்கப்பட்டு விட்டன, சிலரால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்றெல்லாம் கூறி சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.