துபாயில் வெப்பத்தால் போக்குவரத்து விளக்குகள் உருகியதா ?
பரவிய செய்தி
துபாயில் இன்றைய வெப்பநிலையால் சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகியுள்ளது .
மதிப்பீடு
சுருக்கம்
அந்த வெப்பத்தில் மனிதர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையா .
விளக்கம்
சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகுகின்ற அளவிற்கு வெப்பநிலை உள்ளது என்றால் மனிதர்கள் அங்கு வாழ இயலுமா . ஆகா இதுவும் ஒர் புரளி .
இந்த போக்குவரத்து விளக்குகள் உருகியதற்கு காரணம் குவைத்தில் நடந்த கார் விபத்து ஆகும் . ஆம் குவைத்தில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்ததால் அருகில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகியுள்ளது .
அதன்பின் அனைத்தையும் சரி செய்து உள்ளனர் . இந்த புகைப்படம் இணையத்தில் செய்தியாய் வந்துள்ளது . மேலும் இது தொடர்பான வீடியோ பதிவு youtube யில் வெளியாகியுள்ளது .
இச்செய்தியை மாற்றி துபாயில் உள்ள வெப்பநிலையால் இவ்வாறு நிகழ்ந்தது என்று தவறாக பதிவிட்டுள்ளனர் . நம் நிலபரப்பை விட அங்கு வெப்பநிலை அதிகமாக காணப்படும் , 54* c என்ற அளவிற்கு வெப்பநிலை இருக்கும் .
அதற்காக விளக்குகள் உருகுகின்றது என்பது எல்லாம் அதிகப்படியான பொய்களே !! எனவே உண்மை செய்திகள் எது என்று அறிந்து பகிருங்கள் .