This article is from Oct 11, 2017

வானத்தில் இருந்த தேவதை லண்டனில் விழுந்தார்களா ?

பரவிய செய்தி

நாம் கற்பனையில் மட்டுமே கேட்டு வந்த தேவதை லண்டன் பெருநகரத்தில் வானத்தில் இருந்து விழுந்துள்ளார் . உலகம் அழிவை நோக்கி நகர்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம் .

மதிப்பீடு

சுருக்கம்

ஓர் தத்துருவமான சிற்பத்தை தேவதை என்று கதையை உருவாக்கியுள்ளனர் .

விளக்கம்

வானில் உள்ள தேவதை லண்டன் பெருநகரத்தில் விழுந்துள்ளார். ஆகையால், உலகம் அழிவை நோக்கி நகர்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம் சமூக வலைதளங்களில் இப்படங்கள் வைரலாகின. தேவதைகள் பற்றியவை அனைத்தும் கற்பனையே , நிஜ வாழ்கையில் அப்படியென்று எதுவும் இல்லை . அப்படி என்றால் இந்த படத்தில் இருப்பது என்னவென்று கேட்கின்றீர்களா , இது ஒரு கலை வடிவம் ஆகும் .

ஆம், புதுமையான மற்றும் தத்துருவமான சிற்பம் என்று கூட கூறலாம் . பெய்ஜிங் கலைஞர்கள் ஆன சன் யுவான் , பெங் யு இவர்களால் 2௦௦8 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கலை வடிவம் . இதற்கு தேவதை என்று பெயர் சூட்டி உள்ளனர் . பலவகையான பொருள்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த கலை பொருள் ஒரு உயர்ந்த யதார்த்தமான சிற்பம் ஆகும் .

இந்த சிற்பம் கற்பனை மற்றும் புராண பாடங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது . இதன் முழுவிவரத்தை அவர்கள் தங்கள் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்

இதை தவறாக புரிந்து கொண்டு உலகம் அழியப்போகின்றது என்றெல்லாம் கூட வதந்திகளை பரப்பி உள்ளனர் . இதை வடிவமைத்தவர்களை பாராட்டித்தான் ஆகவேண்டும் . இதனால் எத்தனை பேர்கள் முட்டளாகியுள்ளனர் .

இதன் வடிவமைப்பு பற்றி படிப்படியான முழுவிவரம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader