நடிகை திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான தவறான செய்தி !

பரவிய செய்தி
நடிகை திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானார்
மதிப்பீடு
விளக்கம்
திரைப்பட நடிகையும், கர்நாடகா மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தமிழின் முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
உண்மை என்ன ?
2023 செப்டம்பர் 6ம் தேதி 11.56 மணிக்கு பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் என்பவர் திவ்யா உடன் ஜெனிவாவில் உணவு அருந்தும் புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Wonderful meeting the very talented and genteel lady @divyaspandana for dinner in Geneva. We talked about many things including our love for Bangalore. 💫 pic.twitter.com/1kN5ybEHcD
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023
திவ்யா ஸ்பந்தனாவின் இறப்பு செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், ” நான் திவ்யாவிடம் தற்போது பேசினேன். அவர் நன்றாக உள்ளார். நாளைக்கு பராகுவேயில் இருந்து பெங்களூர் வருகிறார் ” என சித்ரா சுப்பிரமணியம் பதிவிட்டு இருக்கிறார்.
I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore.
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023
மேலும் படிக்க : ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !
மேலும் படிக்க : கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண் என ஊடகங்களில் வெளியான வீடியோ போலியானது !
இதற்கு முன்பாக, ஊடக செய்திகளில் வெளியான தவறான செய்திகள் குறித்தும் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், நடிகை திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானார் எனப் பரவும் செய்திகள் பொய்யானவை என்பதை அறிய முடிகிறது.