This article is from Aug 11, 2020

அயோத்தியில் பூமி பூஜைக்காக கூடிய சாமியார்கள் கூட்டம் என வதந்தி !

பரவிய செய்தி

நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜைக்காக குண்டியில் மாஸ்க் அணிந்து வந்த சாமிகள் கூட்டம், அரசின் ஆணைகேற்ப கோவிட் 19 சமூகஇடைவெளி கடைபிடிக்க தவறிய வானரங்கள் கூட்டம், 21ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு பகுத்தறிவற்ற கூட்டம். பாசிச பிடியில் இந்தியாவின் மானம் கப்பலேறுகிறது.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு கூடிய சாமியார்களின் கூட்டம் என மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மத வெறுப்புணர்வு மற்றும் அரசியல் கருத்துக்களுடன் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?  

அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ந்த போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மக்கள் கூட்டம் கூடியதாக தொடர்ந்து வீண் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. பழைய வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வதந்திகளை பரப்பி இருந்தனர்.

மேற்காணும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2013-ம் ஆண்டு அலகாபாத் பகுதியில் நடைபெற்ற கும்ப மேளா திருவிழாவின் போது ஜெர்மனியைச் சேர்ந்த ட்ராவல் ஃபோட்டோகிராஃபர் பெர்கர் என்பவர் எடுத்த புகைப்படம் என தெரிந்து கொள்ள முடிந்தது. 121 Clicks எனும் தளத்திற்கு அளித்த பேட்டியில் ” சாதுக்கள் ” அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்தது குறித்தும் பேசி உள்ளார்.

மேலும் படிக்க : அயோத்தியில் கூடிய கூட்டம் என வைரலாகும் பழைய வீடியோ, புகைப்படங்கள் !

இதற்கு முன்பாகவும், பழைய வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து அயோத்தியில் பூமி பூஜைக்கு கூடிய கூட்டம் என வதந்திகளை பரப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader