சாலையில் GoBackModi என எழுதிய புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா ?
பரவிய செய்தி
நாம போட்ட விதை #GoBackModi. பீகார் மக்கள் தொடர்கிறார்கள். அருமை.
மதிப்பீடு
விளக்கம்
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக “Gobackmodi” எனும் வாசகத்தை சாலையின் நடுவே பெரியதாக எழுதி எதிர்ப்பு காட்டியதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் gobackmodi ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படும். அதேபோன்று, பீகார் மக்கள் தொடங்கி உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இப்படி வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
சில நாட்களுக்கு முன்பாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி சென்ற போது #GoBackModi எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சாலையில் #GoBackModi வாசகத்தை எழுதி எதிர்ப்பை காட்டியதாக மேற்காணும் புகைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
This is one of the busiest roads in Kolkata. #Esplanade. Lakhs and lakhs of people commute, jam packed traffic r seen. Just look at this place tonight. Roads turned into graffitis, no traffic, all roads blocked, students protesting overnight.
This is #Kolkata #modiinkolkata pic.twitter.com/jDaf6vufXi
— Mayukh Ranjan Ghosh (@mayukhrghosh) January 11, 2020
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜனவரி 11-ம் தேதி பத்திரிக்கையாளர் மயூக் ரஞ்சன் கோஷ் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டு, கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
Esplanade now. Students painting on the road.
Loud and clear message from Kolkata. #GoBackModiFromBengal
Coward Modi is afraid of the students & youth. Avoids road. Protest continuing all over the city. pic.twitter.com/2yzSLcVObN— Madhurima | মধুরিমা (@Madhurima_ML) January 11, 2020
2020 ஜனவரி 11-ம் தேதி பிரதமர் மோடி கொல்கத்தாவிற்கு வருகை தரும் போது சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நிகழ்ந்து இருக்கிறது. அப்போது, மோடிக்கு வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையில் Gobackmodi எனும் வாசகத்தை சாலையில் எழுதி போராட்டம் நடத்தியதாக ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், 2020 ஜனவரியில் பிரதமர் மோடி கொல்கத்தா செல்லும் போது அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் Gobackmodi என எழுதிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பீகார் தேர்தலின் போது எழுதியதாக தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.