மாணவியின் குடும்பத்திற்கு பாஜக 2 கோடி நிதியுதவி, அண்ணாமலையை விமர்சித்த ராமதாஸ் எனப் பரவும் போலிச் செய்திகள் !
பரவிய செய்தி
விடுதி காப்பாளரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி லாவண்யாவின் குடும்பத்திற்கு 2 கோடி நிதி உதவி செய்ய இருக்கிறோம். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல – பாஜக தலைவர் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாணவியின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் 2 கோடி நிதியுதவி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அடேய் ஆட்டுக்குட்டி, நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா… ரெண்டு ரூவா சங்கியா இருந்தாலும், 10 கோடி கொடுக்கிர மனசு இருக்கே 😂😂😂
( கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான்….. ) போட்டோஷாப் சங்கிகளுக்கு இது தான் தண்டனை 😂😂 pic.twitter.com/tQPBkSYXXW— தேவ்…🖤❤️ (@yazhiniappa) January 23, 2022
செத்தானுங்க பிஜேபியானுங்க 🤣 pic.twitter.com/exiB5x6BM5
— Savukku_Shankar (@savukku) January 23, 2022
உண்மை என்ன ?
மாணவியின் குடும்பத்திற்கு பாஜக நிதியுதவி அளிப்பதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு தந்தி டிவி சேனலின் சமூக வலைதள பக்கங்களில் பதிவாகவில்லை. இது போலியான செய்தி என தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Fake Card : pic.twitter.com/wRojBVyJFd
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) January 23, 2022
ராமதாஸ் கண்டனம் :
மத வெறியனுக்கும் – சாதி வெறியனுக்கும் சண்டை.. இந்த ரெண்டையும் முழுசா தூக்கியெறிய இந்த தமிழ்நாடே காத்துக்கிட்டு இருக்கு.. அடிச்சுட்டு சாவுங்கடா😂😂🙌🏼 pic.twitter.com/KWcjLnjKf5
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) January 23, 2022
இந்தாங்க நிர்மல். நெக்ஸ்ட்டு @CTR_Nirmalkumar pic.twitter.com/hVhBrIPzxl
— Savukku_Shankar (@savukku) January 23, 2022
” கேவலமான அரசியல் அண்ணாமலை. நாங்கள் சாதி அரசியல் செய்வதை விட கேவலமான மத அரசியல் செய்கிறார் அண்ணாமலை. இறந்த சிறுமியின் பிணத்தை வைத்து அருவருக்கத்தக்க மதஅரசியல் செய்து கொண்டு இருக்கிறார் – பாமக தலைவர் ராமதாஸ் காட்டம் ” என தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றும் பரப்பப்பட்டு வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டும் போலியாக எடிட் செய்யப்பட்டதே.
” தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து படகுகளையும் கைதான மீனவர்களையும் மீட்க வேண்டும். படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல. மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் ” என வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்துள்ளனர்.
அண்ணாமலை பாஜக அரசியல் :
இதுவும் நல்லாத்தான் இருக்கு @CTR_Nirmalkumar pic.twitter.com/yoSAzWWqz3
— Savukku_Shankar (@savukku) January 24, 2022
” திமுக ஐடி விங்கை விட திமுக சாராத கொள்கை பற்றாளர்கள் தீவிரமாக களமாடுகிறார்கள். திராவிட மண்ணில் பாஜக கொள்கை எடுபடாது. தமிழர்களிடம் இருந்து பாஜக தப்ப முடியாது. தமிழர்கள் படிப்பறிவு, அரசியல் அறிவுடன் உள்ளனர் என பாஜக தலைவர் அண்ணாமலை ” கூறியதாக போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டும் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : தமிழக அரசியலில் வரிசைக்கட்டி பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !
இதற்கு முன்பாக தமிழக அரசியலில் அனைத்து அரசியல் கட்சித் தலைவரையும் வைத்து பரப்பப்பட்ட போலி நியூஸ் கார்டுகள் குறித்த விரிவான கட்டுரையை நாம் வெளியிட்டு இருந்தோம்.