கோவை மாநகராட்சியில் தோற்றவரை வெற்றி பெற்றதாகப் பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி.வத்சலா அபார வெற்றி.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா அபார வெற்றி பெற்றதாக ஓர் பதிவு சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பகிரப்பட்டு வருகிறது .
தமிழக பாஜகவின் சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் பிள்ளையப்பன் இப்பதிவை வெளியிட்டு இருந்தார்.
கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி.வத்சலா அபார வெற்றி #நாங்க_வந்துடோம்னு_சொல்லு @annamalai_k @BJP4TamilNadu pic.twitter.com/63AQcTOeed
— எம் பாரதம் இந்தியா🇮🇳 எம்மொழி தமிழ்♥️ (@tamilenuyirrnn) February 22, 2022
உண்மை என்ன ?
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில், கோவை மாநகராட்சி வார்டுகளில் பாஜக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை என இடம்பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் வெற்றிப் பெற்றது திமுக வேட்பாளர் திருமதி அ.புஷ்பமணி என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
இதுமட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் பாஜக பெற்ற 1 நகராட்சி மற்றும் 5 பேரூராட்சி வார்டுகளிலும் அந்த பெயர் இடம்பெற்றவில்லை. கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா 2386 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்து இருக்கிறார்.
மேலும் படிக்க : தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதா ? உள்ளாட்சித் தேர்தலின் உண்மை ரிப்போர்ட் !
முடிவு :
நம் தேடலில், கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா வெற்றி பெற்றதாக பரவும் தகவல் தவறானது. அவர் பெற்றி பெறவில்லை. அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார் என அறிய முடிகிறது
ஆதாரம்
https://tnsec.tn.nic.in/