This article is from Sep 13, 2021

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே ரேஷன் பொருள் எனப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

அறிவிப்பு ! 13.09.2021 திங்கட்கிழமை முதல் ரேஷன் பொருட்கள் பெற நியாய விலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

உண்மை என்ன ?

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எந்த ஊடகமும் அப்படியொரு செய்தியை வெளியிடவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறையைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” அது வதந்தி, அப்படி எந்தவொரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை ” என மறுத்து விளக்கம் அளித்து இருந்தனர்.

முடிவு : 

நம் தேடலில், செப்டம்பர் 13-ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் பெற நியாய விலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும் என பரவும் தகவல் வதந்தியே. தமிழ்நாடு அரசு அவ்வாறு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader