ஹரியானா முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ததும் தனது உடமைகளுடன் வெளியேறும் காட்சி எனப் பரவும் தவறான புகைப்படம்!
பரவிய செய்தி
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்த பிறகு தனது உடமைகளுடன் அரசு வீட்டை காலி செய்த பொழுது எடுத்த படம். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு..
மதிப்பீடு
விளக்கம்
2014 ஆம் ஆண்டிலிருந்து ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்து வந்த மனோகர் லால் கட்டார், தனது அமைச்சரவையுடன் சேர்ந்து தனது பதவியையும் மார்ச் 12 அன்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் “அவர் தனது உடமைகளுடன் அரசு வீட்டை காலி செய்துள்ளார். அவரது எளிமையைப் பாருங்கள். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு இது” என்று கூறி வயதான முதியவர் ஒருவர் கையில் இரண்டு பைகளுடன் சாலையில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
For Tamilnadu voters notification:
Ex Chief Minister of Haryana Mr. Manohar Lal Khattar.
After resigning, he vacated his official residence, picked up his bags and baggages and moved out.
A true RSS man that he is, his possessions are only these much.
Whatever he had have… pic.twitter.com/vx1574yzXB
— Dr Ganesh Iyer Matters (@GanKanchi) March 20, 2024
झोला उठाकर जाना किसी और को था पर खट्टर साब को रवाना करवा दिया #ManoharLalKhattar pic.twitter.com/NzEGmOp2a7
— भाई साहब (@Bhai_saheb) March 12, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் கடந்த 2019 லேயே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
Confessions of teenage-by existing actuality என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2019 அக்டோபர் 24 அன்றே பரவி வரும் இதேப் புகைப்படம் “நாம் ஏழை மனிதர்கள். பையை எடுத்துக்கொண்டு செல்வோம்” என்று ஹிந்தியில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் ஆய்வு செய்ததில், 2019 இல் இருந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த புகைப்படத்தில் இருப்பது, ஹரியானா முன்னாள் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் அல்ல என்பதையும் அறிய முடிந்தது.
இதன்மூலம், ஹரியானாவில் தற்போது (மார்ச் 12 அன்று) தனது முதலமைச்சர் பதவிலிருந்து ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டாரை, 2019 லிருந்தே பரவி வரும் ஒரு புகைப்படத்துடன் தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. மேலும் இந்தப் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: பிரதமர் மோடி பேட்மிண்டன் ஆட திணறியதாகப் பரப்பப்படும் ஹரியானா முதல்வரின் வீடியோ
முடிவு:
நம் தேடலில், ஹரியானா முன்னாள் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் தனது ராஜினாமிற்கு பிறகு அரசு வீட்டை காலி செய்யும் காட்சி எனப் பரவி வரும் புகைப்படம் கடந்த 2019 லிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும், இந்த புகைப்படத்தில் இருப்பது மனோகர் லால் கட்டார் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.