கராஞ்சியின் சம்சாரா ஏரியில் மனித முக வடிவில் மீன்கள் உள்ளதாகப் பரவும் AI வீடியோ !

பரவிய செய்தி

கராஞ்சியின் தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டலப் பகுதியில் நைல் நதியின் வெப்பமண்டல ஆதாரங்களின் ஏரிகளில் ஒன்றான சம்சாரா ஏரி உள்ளது. சமீபத்தில், மனித முகத்தை ஒத்த விசித்திரமான மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டது! இது நீர்வாழ் ஆராய்ச்சி விஞ்ஞானிகளை குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ராஞ்சியின் நைல் நதியின் வெப்பமண்டல ஆதாரங்களின் ஏரிகளில் ஒன்றாக சம்சாரா ஏரியில் மனித முகத்தை ஒத்த விசித்திரமான மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி 1:25 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவின் ஆரம்பத்தில், “Homo Piscis (மனித முக வடிவில் மீன்கள்)” என்று குறிப்பிடப்பட்டு, வீடியோ முழுவதும் பல வகையான மீன்கள் காட்டப்படுகின்றன. இதில் மீன்கள் அனைத்தும் மனித முக வடிவில் இருப்பதைக் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ முதன்முதலில் Headtap Videos என்ற யூடியூப் பக்கத்தில் தான் ஜனவரி 18, 2024 அன்று “மனித முகம் கொண்ட மீன் பற்றிய திடுக்கிடும் உண்மை” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

மேலும் இதே யூடியூப் பக்கத்தில், ‘கண்ணுடன் காட்சியளிக்கும் செடி‘ என்று குறிப்பிட்டும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

எனவே Headtap Videos என்ற யூடியூப் பக்கம் குறித்து மேலும் தேடியதில், இந்த சேனலின் விளக்கத்தில்கிராஃபிக்ஸ் மற்றும் வீடியோக்களின் சோதனைகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம் இந்த யூடியூப் பக்கங்களில் உள்ள வீடியோக்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.

மேலும் பரவி வரும் வீடியோவின் காட்சிகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய, hivemoderation இணையதளத்தில் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், இந்த புகைப்படம் 99.9%, AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நமக்கு காட்டியது.

மேலும் பரவி வரும் பதிவுகளில், கராஞ்சி பகுதியின் சம்சாரா ஏரியில் தான் இந்த அரியவகை மீன்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்த ஏரி குறித்து தேடினோம். கர்நாடகாவின் மைசூருவில் கராஞ்சி என்ற பெயரில் ஒரு ஏரி இருப்பதை அறிய முடிந்தது. ஆனால் கராஞ்சி என்ற பகுதியில், சம்சாரா என்ற பெயரில் எந்தவொரு ஏரியும் இல்லை. 

மேலும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள் எனத் தவறாகப் பரப்பப்படும் AI படம் !

முடிவு:

நம் தேடலில், கராஞ்சியின் சம்சாரா ஏரியில் மனித முக வடிவில் மீன்கள் உள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இவை போலியாக உருவாக்கப்பட்ட AI வீடியோ என்பதையும் அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader