இந்திய வரலாறு தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்கிற முடிவை ஏற்க முடியாது என்றாரா ஜே.பி.நட்டா ?
பரவிய செய்தி
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி. அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு – நட்டா
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி. அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு ” எனக் கூறியதாக தினமலர் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொன்மையான பொருநை ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் ” எனப் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடைய இக்கூற்றை மறுத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்த கருத்து என தினமலர் நியூஸ் கார்டு பரவி வருகிறது. ஆனால், தினமலர் முகநூல் பக்கத்தில் அப்படியொரு நியூஸ் கார்டு வெளியாகவில்லை.
தினமலரில் செப்டம்பர் 11-ம் தேதி, ” உ.பி., உத்தரகாண்ட் கோவாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி நிச்சயம்: நட்டா ” என இடம்பெற்ற நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக பரவும் தினமலர் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிந்தது.