This article is from Dec 23, 2019

சவூதியில் மதம் சார்ந்த தவறான பதிவால் கைதான இந்தியர்| வைரலாகும் புகைப்படங்கள் !

பரவிய செய்தி

காபாவை இடித்து விட்டு ராமர் கோவில் மக்காவில் கட்டுவோம், மோடி எங்களுடன் இருக்கிறார் என முகநூலில் பதிவிட்ட இந்தியர் சவூதியில் கைது.

மதிப்பீடு

விளக்கம்

சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இந்தியர் ஹரிஷ் பங்கேரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் மதம் சார்ந்த தவறான பதிவுகளையும், சவூதியின் இளவரசர் சல்மானை திட்டிய பதிவின் காரணத்திற்காக சவூதி போலீசால் கைது செய்யப்பட்டதாக புகைப்படங்கள், முகநூல் பதிவுகளின் ஸ்க்ரீன்ஷார்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் உள்ள குந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பங்கேரா சவூதியின் தம்மம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் ஏசி டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். தன்னுடைய முகநூல் பக்கத்தில், உலக முஸ்லீம் மக்களின் புனித தலமாக கருதப்படும் மெக்காவில் உள்ள காபாவை குறித்து தவறான பதிவை டிசம்பர் 21-ம் தேதி பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவு நூற்றுக்கணக்கான ஷேர், கமெண்ட்களை பெற்று வைரலாகியது.  அந்த பதிவில், பலரும் ஹரிஷ்க்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஹரிஷ் உடைய முகநூல் பதிவு வைரலாகி புகார் அளிக்கப்பட்டதால் தம்மம் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்துள்ளதாக சில செய்தி இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
மேலும், அவர் பணியாற்றி வந்த நிறுவனம் Gulf carton factory co-யின் பொது மேலாளர் மேஷரி அம் அல் ஜாபர் வெளியிட்ட செய்தியில், முகநூல் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்ட ஹரிஷை உடனடியாக பணியில் இருந்தும், ஒப்பந்தத்தையும் நீக்கி உள்ளோம் ” என கூறியுள்ளதாக daijiworld என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், தன்னுடைய தவறான பதிவிற்கு ஹரிஷ் மன்னிப்பு கேட்டு பதிவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதாகவும் daijiworld இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள முதன்மை செய்திகளில் ஹரிஷ் பங்கேரா குறித்த செய்திகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உடைய அசிஸ்டென்ட் எடிட்டர் அமித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஹரிஷ் பங்கேரா கைதை உறுதி செய்து இருக்கிறது.

Twitter link | archived link 

சவூதி அரேபியாவில் தவறான கருத்தை பதிவிட்டு கைது செய்யப்பட்டுள்ள குந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பங்கேரா உடைய மனைவி, தன் கணவருடைய சமூக வலைதள கணக்கை முடக்குமாறு உள்ளூர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பதிவிட்டு உள்ளார்.

தற்பொழுது ஹரிஷ் பங்கேரா உடைய முகநூல் பக்கம் நீக்கப்பட்டு உள்ளது. எனினும், ஹரிஷ் பங்கேரா உடைய முகநூல் பதிவுகள், விசா குறித்த அடையாளங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது. அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு பலரும் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக 2016-ல் சவூதியில், இஸ்லாமிய புனித தலத்தை தவறாக சித்தரித்து பதிவிட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. காபாவில் புத்தரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படத்தால் இந்தியர் கைது செய்யப்பட்டதாக அல்அரேபியா செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

2016 டிசம்பரில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ” சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த சங்கர் பூன்னம் என்பவர் காபா மீது இந்து கடவுளான சிவன் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டதால் கைது செய்யப்பட்டதாக ” வெளியாகி இருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader