போதை மருந்து கடத்தியவர் தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குவதாகச் சவுக்கு சங்கர் பரப்பும் பொய்!
பரவிய செய்தி
சின்ன அண்ணி இயக்கும் படத்தை தயாரிப்பவர் போதை மருந்து கடத்துபவரா?
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற ஒரு கும்பலைக் கைது செய்தது. இக்கடத்தல் சம்பவத்தில் திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக-வை சேர்ந்தவருமான ஜாஃபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து திமுகவில் இருந்து சாதிக்கை நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்.
போதை பொருட்களை கடத்த ஈஸியாக இருக்கும் என்பதால்தான் அந்த போதை பொருள் கடத்திய ஜாஃபர் சாதிக் என்பவனை திமுக NRI Wing துணை அமைப்பாளராக நியமித்ததோ?
அந்த போதை பொருட்களை கடத்திய பணத்தில் தான் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்கிறான் அந்த ஜாஃபர்… https://t.co/xZowbF3UFM
— Kalyan (Sanatani) (@JKalyanaraman) February 25, 2024
இந்நிலையில் சாதிக் தயாரிக்கும் ‘மங்கை’ என்னும் படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குவதாகச் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள போஸ்டரில் ‘இயக்குநர் கிருத்திகா உதயநிதி’ என இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதே போஸ்டரில் ‘மங்கை’ என்னும் படத்தின் தலைப்பிற்குக் கீழே ‘எழுத்து மற்றும் இயக்கம் குபேந்திரன் காமாட்சி’ என இருப்பதையும் காண முடிகிறது.
மேற்கொண்டு மங்கை படத் தயாரிப்பு நிறுவனமான ‘JSM Pictures’ எக்ஸ் பக்கத்திலும் இதே போஸ்டர் கடந்த (பிப்.) 13ம் தேதி பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. மேலும் அப்பதிவில் மங்கை திரைப்படத்தின் ’ஏலம்மா ஏலோ’ பாடலை இயக்குநர் கிருத்திகா வெளியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
#EelammaYelo – The #FirstSingle from #Mangai to be released by fantabulous filmmaker @astrokiru tomorrow at 5.00 PM ⏰#MangaiFirstSingle
A @Theeson_Music MusicalStay tuned @DushyanthJayap1 @anandhiactress @jsmpicture @arjaffersadiq @Gubenthirank @parthiban2830… pic.twitter.com/fVOHl0iFCd
— jsmpictures (@jsmpicture) February 13, 2024
இத்திரைப்படத்தின் பாடல் வெளியீடு தொடர்பாக ’மாலை மலர்’ தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டார்’ என்றுள்ளது.
கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை, காளி போன்ற திரைப்படங்களையும் பேப்பர் ராக்கெட் என்னும் வலைத்தொடரையும் இயக்கியுள்ளார். அவரது தொழிலைக் குறிக்கும் வகையில் ‘இயக்குநர் கிருத்திகா’ எனக் குறிப்பிட்டதை, மங்கை திரைப்பட இயக்குநர் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
“காதலிக்க நேரமில்லை”#KadhalikkaNeramillai@actor_jayamravi@MenenNithya@astrokiru@RedGiantMovies_@arrahman@iYogiBabu @VinayRai1809 @LalDirector @highonkokken @TJBhanuOfficial @LakshmyRamki @VinodhiniUnoffl @ManoSinger_Offl @dopgavemic @editorkishore @MShenbagamoort3 pic.twitter.com/sqx38vb9Cx
— kiruthiga udhayanidh (@astrokiru) November 29, 2023
கிருத்திகா உதயநிதியின் அடுத்த திரைப்படமான ஜெயம்ரவி நடிக்கும் ” காதலிக்க நேரமில்லை” படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கிறது.
மேலும் படிக்க : கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்குகள் முடக்கம் எனத் தவறான செய்தியைப் பரப்பிய சாட்டை துரைமுருகன் !
இதற்கு முன்னர் கிருத்திகா குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக தேடப்படும் ஜாபர் சாதிக் தயாரிக்கும் மங்கை திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் படத்தின் பாடலைத்தான் வெளியிட்டுள்ளார். அப்படத்தை குபேந்திரன் காமாட்சி என்பவர்தான் இயக்கியுள்ளார்.