முஸ்லீம் வியாபாரி இந்து ஆண்களுக்கு ஜூஸ் மூலம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக வதந்தி !
பரவிய செய்தி
இந்துக்களை மலட்டு ஆண்களாக மாற்றும் முஸ்லீம் அப்துல். இவர் தனது பலச்சாறு கடையில் இந்துக்களுக்கு மட்டும் அமிலத்தன்மை வாய்ந்த ஆன்மையை குறைக்கும் மாத்திரையை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார் . இவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் இவர் போன்ற உணவு பலச்சாறு போன்ற உணவு பொருட்களில் மாத்திரை கலந்து இந்துக்களை மலட்டு தன்மை ஏற்படுத்தவும் இதன் மூலம் இந்துக்களின் வம்சம் விருத்தியாவதை தடுக்கவும் இந்தியா எங்கும் பழச்சாறு உணவு கடைகள் போன்றவற்றில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதே போன்று கேராளாவில் முஸ்லீம் கடைகளில் விற்படும் பிரியாணியில் மலட்டுதன்மையை ஏற்படுத்தும் மாத்திரை கலப்பதையும் ஒரு வீட்டின் அறை முழுவதும் மாத்திரைகளை காவல்துறை கைப்பற்றியதையும் கேரளா சேனல்கள் ஒளிப்பி அதிர்ச்சி தந்தன . எனவே இந்து சகோதர சகோதரிகளே நீங்களோ உங்கள் குழந்தைகளோ குடும்பத்தினரோ வெளியில் சென்றால் முஸ்லீம் கடைகளில் பழச்சாறு பிரியாணி சாப்பாடு புரோட்டா சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள் . உங்கள் வம்சம் தழைக்க இதை அவசியம் செய்யுங்கள்
மதிப்பீடு
விளக்கம்
முஸ்லீம் வியாபாரி ஒருவர் தன்னுடைய ஜூஸ் கடையில் இந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்த ஜூஸில் மாத்திரைகளை கலந்து கொடுப்பதாக நீண்ட ஒரு நிலைத்தகவல் உடன் தள்ளுவண்டியில் சாத்துக்குடி போன்ற ஜூஸ் விற்பனை செய்யும் நபரை சுற்றி வளைத்த சிலர் அவரின் வண்டியின் உள்ளே வைக்கப்பட்ட வாளியில் மஞ்சள் நிற தண்ணீரையும், பாத்திரத்தில் சர்பத் போட பயன்படுத்தும் எசென்ஸ் போன்ற ஒன்றையும் காண்பித்து பேசும் 4 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் மதம் சார்ந்து வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் ” Awareness now ” எனும் லோகோ சுற்றி வருவதை பார்க்க முடிந்தது. அதை வைத்து தேடிப் பார்க்கையில், 2020 பிப்ரவரி 14-ம் தேதி Awareness now எனும் முகநூல் பக்கத்தில் ” Be careful while drinking and eating from food stalls on street ” எனும் தலைப்பில் இவ்வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.