கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் மகன் இரவு பள்ளிக்குள் நுழைவதாக பரவும் சிசிடிவி காட்சி.. உண்மை என்ன ?
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உயிரிழந்த தனியார் பள்ளி தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அவற்றில் மாணவி உயிரிழந்த அன்று பள்ளி தாளாளரின் மகன் நள்ளிரவில் பள்ளிக்குள் சென்ற காட்சி என ஜூலை 13-ம் தேதி 10.30 மணியளவில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் போய்விட்டதா??? இல்லை அந்த கல்லூரியின் தாளாளர் மகன் அடிக்கடி பெண்களை கற்பழித்துக் கொள்ளும் காம கொடூரன் என சந்தேகம் இருக்கிறது நேர்மையான விசாரணை தேவை… pic.twitter.com/HGmPxldJyV
— DINDIGUL_EAST_DISTRICT_IT&SM_WING (@JpnPillai) July 18, 2022
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், இது தவறான வீடியோ. பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறையின் முகநூல் பக்கத்தில் வைரல் வீடியோ குறித்து பதிவிடப்பட்டு உள்ளது
காவல்துறை பதிவில், ” கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்மநபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிக்கணினியை திருடமுயற்சி செய்த சம்பவம் தொடர்பான CCTV வீடியோ என்று தெரியவருகிறது .