கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போலீஸ் மீது கல் வீசிய பாஜகவினர் கைதான வீடியோவா ?

பரவிய செய்தி

கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கைது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகையில், முஸ்லீம் பெண்கள் போன்று  ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக 27 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன ?  

முஸ்லீம் பெண்கள் போன்று பர்தா அணிந்து போலீஸ் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல் வீசியதாக இதே வீடியோ கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக கூட தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்ததாக இவ்வீடியோவை பரப்பினர்.

மேலும் படிக்க: தெலங்கானாவில் பர்தா அணிந்து கலவரம் செய்ய முயன்ற ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கைதா ?

முடிவு : 
கர்நாடகா மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அது 2020-ல் ஆந்திராவில் பர்தா அணிந்து மதுபாட்டில்களை கடத்திய நபர் சிக்கிய போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
Please complete the required fields.




Back to top button