இன்றுவரை காஷ்மீர் மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக பொய் தகவலைப் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி!

பரவிய செய்தி
சுதந்திரம் அடைந்ததிலிருந்து காஷ்மீரில் மின்சாரம் இலவசம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இனி அப்படி இல்லை…!!
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் உள்ள மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா என இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
மேலும், ” சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெற்று வருகின்றனர். இனி கட்டணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா ” கூறியதாக சமயம் தமிழ் செய்தியில் வெளியாகி இருக்கிறது .
காஷ்மீர் பாயானுங்களுக்கு 70 வருஷமா கொடுத்த ஹஜ் மானியம், இலவச மின்சார பணம் திரும்ப கிடைத்தாலே போதும்… 10 வருடங்களுக்கு பெட்ரோல் மானிய விலையில் கொடுக்க முடியும்…
— பகவா தமிழன் 🚩🇮🇳 (@BhagavaTamilan) June 24, 2022
இதையடுத்து, காஷ்மீர் மக்களுக்கு 70 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
காஷ்மீர் மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறதா என மின்சாரம் விநியோகம் செய்யும் அமைப்பான காஷ்மீர் மின் விநியோகம் கார்ப்பரேசன் லிமிடெட் இணையதளத்தில் தேடிப்பார்க்கையில், ” குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்து இருப்பதை பார்க்க முடிந்தது. Tariff Order Distribution 2007-08 ஆவணத்தின்படி, 100 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.1.15 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது ” என அறிய முடிந்தது.

முடிவு :
நம் தேடலில், சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெற்று வருகின்றனர் எனப் பரவும் தகவல் மற்றும் செய்திகள் தவறானது. ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் இலவசம் அல்ல, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கே மின்சாரம் இல்லை என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பேசியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.