This article is from Jan 30, 2021

லண்டன் விமான நிலையத்தில் தமிழர் வைத்த டீக்கடை எனப் பரவும் கேரளா புகைப்படம் !

பரவிய செய்தி

வாவ் வேற லெவல். லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை போட்ட நம்ம தமிழனின் துணிவு.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

லண்டன் விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் வைத்த டீக்கடை என இப்புகைப்படம் கடந்த 2016-ல் இருந்தே அதிக அளவில் வைரலாகி இருக்கிறது. தற்போது மீண்டும் அதேப் பதிவு பகிரப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” கொச்சி லூலூ மால் பகுதியில் அமைக்கப்பட்ட நாடன் சாயாக்கடை (நாட்டு டீக்கடை ) ” என இப்புகைப்படத்தை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் பத்திரிக்கையாளர் ராஜேஷ் ஆப்ரஹாம் 2016-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link

2017-ம் ஆண்டிலேயே இப்புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது, இப்புகைப்படத்தை வைத்து தவறான செய்தி பரவுவதாக யூடர்ன் மீம்ஸ் மூலம் பதிவிட்டு இருந்தோம்.

Facebook link | Archive link 

முடிவு :

நம் தேடலில், லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை வைத்த தமிழர் எனப் பரவும் புகைப்படம் கேரளா கொச்சியில் உள்ள லூலூ மாலில் அமைக்கப்பட்ட டீக்கடை என்றும், அது தமிழர் வைத்த டீக்கடை இல்லை என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader