This article is from Jan 20, 2022

முத்துராமலிங்கத் தேவரால் சர்ச்சை ஏற்படும் என டி.ஆர்.பி.ராஜா கூறியதாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி

முத்துராமலிங்கத்தேவரால் சர்ச்சை ஏற்படும்… முத்துராமலிங்கத்தேவர் சிலையை வைத்தால் பிற சமூகங்களில் சர்ச்சை ஏற்படும். வேலுநாச்சியார் தனிஆளாக அந்நியர்களை எதிர்த்து போரிட்டார். எனவே வேலுநாச்சியார் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவு செய்தோம்- திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மன்னார்குடி எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராகவும் உள்ள டி.ஆர்.பி.ராஜா, முத்துராமலிங்கத் தேவர் சிலையை வைத்தால் சர்ச்சை ஏற்படும் என்பதால் வேலுநாச்சியார் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவு செய்தோம் எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, முத்துராமலிங்கத் தேவர் மற்றும் வேலுநாச்சியார் குறித்து கருத்து தெரிவித்தாரா எனத் தேடுகையில், அவரின் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களோ அல்லது செய்தியோ வெளியாகவில்லை.

நியூஸ் 7 தமிழ் உடைய முகநூல் பக்கத்தில் உள்ள நியூஸ் கார்டுகளை ஆராய்கையில், டி.ஆர்.பி.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக ஜனவரி 19-ம் தேதி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

பரப்பப்படும் நியூஸ் கார்டில் நியூஸ் 7 தமிழ் உடைய வாட்டர்மார்க் கூட இடம்பெறவில்லை. நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டில் போலியான செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெளிவாய் அறிய முடிகிறது.

இதுகுறித்து, நியூஸ் 7 தமிழ் உடைய இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியானது ” எனத் தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க : பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

இதேபோல், பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி, ” மக்களுக்கு நன்றியே இல்லை ” எனக் கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டது.

முடிவு : 

நம் தேடலில், முத்துராமலிங்கத்தேவரால் சர்ச்சை ஏற்படும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாக பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader