மோடி பத்திரிகை சந்திப்பு வேண்டாமென கமலா ஹாரிஸிடம் கோரிக்கை வைத்ததாக போலிச் செய்தி !
பரவிய செய்தி
தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ” தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் கோரிக்கை ” வைத்ததாக புதிய தலைமுறையின் போலியான நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 24-ம் தேதி, ” கமலா ஹாரிஸை வரவேற்க இந்தியர்கள் காத்திருப்பதால் விரைவில் இந்தியா வர வேண்டும் – பிரதமர் மோடி ” என்ற செய்தியே புதியதலைமுறையில் வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து கிண்டல் செய்து பரப்பி வருகிறார்கள். இதைப் பார்ப்பதற்கு எடிட் செய்தது எனத் தெளிவாக தெரிந்தாலும் சிலர் அதை அறியாமலேயே பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : பிரதமர் மோடிக்கு கொரோனா வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவா ?
இதேபோல், பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதாக வதந்தியை பரப்பி இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதால் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை என பரவும் புதியதலைமுறை நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.