This article is from May 29, 2019

மோடி பிரதமர் ஆவதை 450 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டர்டாமஸ் கணித்தாரா ?

பரவிய செய்தி

பிரான்ஸைச் சேர்ந்த ஞானியான நாஸ்டர்டாமஸ், 450 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மோடியின் ஆட்சி அமையும் என்பதை கணித்துள்ளார் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண், ரிஜுஜு பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு லைக்குகளை அள்ளியுள்ளது.. மோடி பிரதமர் ஆவார் என 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டது ஆச்சரியமான உண்மை !

மதிப்பீடு

விளக்கம்

பிரான்ஸைச் சேர்ந்த ஞானியான நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவை கற்பனையானதா ? தற்செயலாக நடைபெற்றதா ? என்ற விவாதம் தொடர்கிறது. மூன்றாம் உலகப் போர் வருவதையும் நாஸ்டர்டாமஸ் கணித்தார் என செய்திகளில் பார்க்க முடிந்தது. இதற்கிடையில், நாஸ்டர்டாமஸ் இந்தியாவில் மோடியின் ஆட்சி அமையும் என 450 ஆண்டுகளுக்கு முன்பே கணித்ததாக செய்தித்தாள்களில் வெளியாகி அவரின் ஆதரவாளர்களால் கொண்டப்பட்டது.

உண்மையில், நாஸ்டர்டாமஸ் இந்தியாவில் நிகழும் மாற்றம் குறித்து கணிப்புகளை விட்டு சென்றாரா என்பதை குறித்த தேடலில் பல விஷயங்களை காண முடிந்தது. அதை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்.

2017-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணைய செய்தியில் ” Nostradamus and India ” என்ற கட்டுரையில், Narendus – மோடி இந்தியாவின் ஆட்சியில் அமர்வார். குஜராத்தில் இருந்து வருவார், டீ விற்றார், ராமர் கோவில் கட்டுவார், பிஜேபி கட்சி பற்றி என்றெல்லாம் நாஸ்டர்டாமஸ் கணித்து இருந்ததாக மொழிப் பெயர்ப்பு உடன் நீண்ட விளக்கத்தை காண முடிந்தது “.

இதனைப் அடிப்படையாக வைத்துக் கொண்டு zee news தளத்திலும் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரையில் பொறுப்பு துறப்பு என மேற்கோள்காட்டி, இது ஆசிரியரின் பார்வையில் எழுதப்பட்டு உள்ளது. மேலும், கட்டுரையானது நையாண்டித்தனமானது என்றும், உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

zee news-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா உடன் இந்தியவியலாளர், பத்திரிகையாளர் மற்றும் வரலாற்று ஆசிரியரான Francois Gautier என்பவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்டர்டாமஸ் உடைய கணிப்புகளை மொழிப் பெயர்த்ததாக குறிப்பிட்டு உள்ளனர். நாஸ்டர்டாமஸ் கணிப்புகளை மொழிப் பெயர்த்த Francois Gautier பற்றி ALT NEWS ஆய்வுக் கட்டுரை ஒன்றை 2017-ல் மார்ச் மாதம் வெளியிட்டு இருந்தனர்.

1999-ல் ” 51st Volume of RSS weekly Magazine Organizer ” வெளியிட்ட இதழில் 400 ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்குவது குறித்து நாஸ்டர்டாமஸ் கணித்து இருந்ததை Francois Gautier ஒரு மாதத்திற்கு முன்பு தெரிவித்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.

பிரதமர் மோடி குறித்து மட்டும் அல்ல ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்படுவது குறித்தும் நாஸ்டர்டாமஸ் கணித்து இருந்ததாக கூறியதை அடுத்து Francois Gautier 2001-ல் வெளியிட்ட ” A Western Journalist on India ” மற்றும் 2003-ல் வெளியான ” Rewriting Indian history ” புத்தகத்தை Alt நியூஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தனர்.

18 ஆண்டுகளுக்கு மேலாக Francois Gautier வெளியிட்டு வந்த நாஸ்டர்டாமஸ் உடைய முன்கணிப்பு வாக்கியங்களில் சில இடங்களில் வார்த்தைகளை மாற்றி மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தார் என ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளனர். உண்மைக்கு புறம்பாக தன் கற்பனையை அடிப்படையாக கொண்டு இவ்வாறு மொழிப் பெயர்த்து உள்ளார்.

உண்மையான மொழிப் பெயர்ப்பு : Nostradamus-Prophecies.pdf

நாஸ்டர்டாமஸ் உடைய முன்கணிப்புகளில் இந்தியாவை பற்றி குறிப்பாக எந்தவொரு முன்கணிப்பும் இல்லை என்றே கூறலாம். நரேந்திர மோடி குறித்து நாஸ்டர்டாமஸ் முன்பே கணித்து இருந்தார் என்பது முற்றிலும் பொய்யான ஒன்று என நிரூபித்து காட்டியுள்ளனர். மேலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் Nostradamus and India என்ற ஆசிரியரின் கட்டுரைக்கு பொறுப்பு துறப்பை வெளியிட்டு விட்டனர்.

இந்தியாவில் போலியான செய்திகளுக்கு ஆதரவு என்றும் அதிகமாக இருப்பதால் இச்செய்தி உண்மை என செய்தித்தாள்கள் வரை பரவியது. வரலாற்று தொடர்பான செய்திகள் என்றால் சொல்லவே வேண்டாம், ஆச்சரியத்தில் உண்மை என அனைவரும் நினைத்து விட்டனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader