ஹரியானாவில் காலி இருக்கைகளுடன் உரை நடத்திய பிரதமர் மோடி எனப் பரவும் தவறான செய்திகள்!
பரவிய செய்தி
ஹரியானா! இப்போது பாஜக ஆளும் மாநிலம்! அங்கே மோடியோட வரலாறு காணாத தேர்தல் பிரசாரக் கூட்டம்!அப் கி பார்! மோடிக்கோ நக்கிகிட்டு போகுது பார்! காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றும்! நரேந்திரதாஸ், தாமோதரதாஸ் மோடி! 04 ஜூன் க்கு அப்புறம் மோடிக்கு திஹார் உறுதி!
மதிப்பீடு
விளக்கம்
2024 மக்களவைத் தேர்தல் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் நாடு முழுவதும் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக தொடர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் ஒரு கூட்டத்தில் காலி நாற்காலிகளை பார்த்து உரை ஆற்றியதாகக் கூறி 27 வினாடிகள் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Modi’s MASSIVE rally in Haryana#LokSabhaElections2024 pic.twitter.com/T9ROJD3TL6
— Chirag Patel (@tuvter) May 18, 2024
ஹரியானா! இப்போது பாஜக ஆளும் மாநிலம்! அங்கே மோடியோட வரலாறு காணாத தேர்தல் பிரசாரக் கூட்டம்!அப் கி பார்! மோடிக்கோ நக்கிகிட்டு போகுது பார்! காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றும்! நரேந்திரதாஸ், தாமோதரதாஸ் மோடி! 04 ஜூன் க்கு அப்புறம் மோடிக்கு திஹார் உறுதி!pic.twitter.com/BEkwoqc7zW
— மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) (@Jasmine01737661) May 19, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ மே 01 அன்று புனேவில் எடுக்கப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
மோடி குப்பை பேச்சை கேட்க மக்கள் தயாராக இல்லை
புனேவில் மோடி கலந்துக்கொண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டமின்றி கிடந்த காலி சேர்கள்#NoVoteToBJP #Vote4INDIA pic.twitter.com/gHeTlK6hlp
— ஜீரோ நானே (@Anti_CAA_23) May 1, 2024
எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்தோம். பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழு பகுதி ஏப்ரல் 29 அன்று “பிரதமர் மோடி நேரலை | மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பொதுக்கூட்டம் | லோக்சபா தேர்தல் 2024” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் சரியாக 54:23 நிமிடத்தில் மோடி பேசியிருப்பது, பரவி வரும் வீடியோவுடன் சரியாக பொருந்தியது.
இதன் மூலம் மாகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பழைய பிரச்சார வீடியோவை, ஹரியானாவில் தற்போது நடந்தது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் புனே பிரச்சாரக் கூட்டத்தில் மோடி உரையாற்றிய போது, மக்கள் கூட்டமாக கலந்து கொண்டுள்ளதையும் வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், ஹரியானாவில் காலி இருக்கைகளுடன் உரை நடத்திய பிரதமர் மோடி என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.