மோடி காந்தியையும், கோட்சேவையும் வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியையும் வணங்குகிறார், அவரைக் கொன்ற கோட்சேவையும் வணங்குகிறார் என மேற்காணும் புகைப்படம் முகநூலில் பகிரப்படுவதை பார்க்க நேரிட்டது.
பிரதமர் மோடி கோட்சேவை வணங்குவதாகக் கூறி வதந்திகள் பரவுவது முதல்முறை அல்ல. இப்படி பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது கோட்சே அல்ல, சாவர்க்கர். இது குறித்து தேடுகையில், 2018 டிசம்பர் 30-ம் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அறைக்கு சென்றதாக புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
Among those imprisoned at Cellular Jail was the great Veer Savarkar. I visited the cell where the indomitable Veer Savarkar was lodged. Rigorous imprisonment did not dampen Veer Savarkar’s spirits and he continued to speak and write about a free India from jail too. pic.twitter.com/dbsyzuVUjA
— Narendra Modi (@narendramodi) December 30, 2018
2018-ல் பிரதமர் அந்தமான் தீவிற்கு சென்று சாவர்க்கர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல், பிஎம்ஓ இந்தியா யூடியூப் சேனலில் பிரதமர் மோடி அந்தமானின் செல்லுலார் சிறைக்கு சென்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
2018-ல் அந்தமான் செல்லுலார் சிறைக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி அங்கு சாவர்க்கரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதற்கு முன்பாக, பிரதமர் மோடி சாவர்க்கரின் சிலைக்கு முன்னால் வணங்கும் புகைப்படமும் கோட்சே உடையது என தவறாக பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மோடி காந்தியை கொன்ற கோட்சேக்கு மாலை அணிவித்து வணங்கினாரா ?
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி காந்தியை வணங்கிவிட்டு, அவரைக் கொன்ற கோட்சேவையும் கொன்றதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது சாவர்க்கர் என அறிய முடிகிறது.