ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !

பரவிய செய்தி

‘ஆனா இது புதுசா இருக்குண்ணே’.. அடிபம்பை அடிச்சா தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீஸார் அதிர்ச்சி.  அட! இது தான் திராவிட மாடல்!

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் அடி பம்பு மூலம் தண்ணீருக்கு பதிலாக சாராயத்தை விற்ற சம்பவம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. நிலத்தில் 7 அடிக்கு கீழ் அமைக்கப்பட்ட ட்ரம்புகளில் இருந்து பம்பு மூலம் எடுத்து சட்ட விரோதமாக சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இரு கிராமங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தெரிய வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் வீடுகளில் இருந்தும், நிலத்திற்கு அடியில் 8 ட்ரம்புகளில் இருந்தும் 1,200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலத்திற்கு அடியில் ட்ரம்களில் சாராயத்தை சேகரித்து வைத்து அடி பம்பு மூலமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததை போலீசார் கண்டறிந்த சம்பவம் குறித்து தமிழில் முன்னணி செய்திகள் பலவற்றிலும் செய்திகள் வெளியாகின.

ஒன் இந்தியா தமிழ் இணையதளம் , ” ‘ஆனா இது புதுசா இருக்குண்ணே’.. அடிபம்பை அடிச்சா தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீஸார் அதிர்ச்சி ” எனும் தலைப்பில் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Twitter link 

ஒன் இந்தியா தமிழ் ட்விட்டரில் பதிவிட்ட பதிவிலும் மத்தியப்பிரதேசம் என டக் செய்து இருக்கிறார்கள். ஆனால், இந்த பதிவை பகிர்ந்த தமிழக பாஜகவின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி ” இது தான் திராவிட மாடல்! ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

பாஜகவின் சிவராஜ் சிங் செளகான் முதல்வராக இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சட்ட விரோத மதுபானத்தை தமிழ்நாடு என தவறாகப் பரப்பி இருக்கிறார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader