பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் பாஜக உறுப்பினர் அல்ல என குஷ்பு சொன்ன பொய் !

பரவிய செய்தி

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மனநலம் குன்றியவர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த காட்சி மிகவும் பயங்கரமான மற்றும் கவலைக்குரிய சம்பவம். இவை ஆணவம், உணர்வின்மை மற்றும் கொடூரமான குற்றம். அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால், அது போதாது, அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் அவர் பாஜக உறுப்பினர் அல்ல. மேலும், இதுபோன்ற குற்றங்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். 

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

த்தியப் பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மனிதத்தன்மையற்ற இச்செயலை செய்த பிரவேஷ் சுக்லா சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் முன்னாள் பிரதிநிதி எனக் கூறி பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

சமூக வலைதளம் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்த உடன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் செளகான் உத்தரவு பிறப்பித்ததாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

Twitter link  

மேலும், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றவாளி என்பவர் குற்றவாளி மட்டுமே. அவருக்கு சாதியோ, மதமோ, கட்சியோ கிடையாது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

Twitter link 

இதையடுத்து, பிரவேஷ் சுக்லா மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு உள்ளார்.

குற்றவாளி பாஜக உறுப்பினர் : 
.
பிரவேஷ் சுக்லா பாஜகவைச் சேர்ந்தவர் என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலை மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அம்மாநில பாஜக தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது.

Twitter link 

சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா அளித்த பேட்டியில், ” அந்த நபர் என்னுடைய பிரதிநிதி அல்ல, பாஜக அலுவலக பொறுப்பாளரும் அல்ல. குற்றச்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பாஜக உள்ளது என்றும், எஸ்.டி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது ” என்றும் தெரிவித்து உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

இதையடுத்து, பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் தொடர்பான பதிவில், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் குற்றவாளி பாஜவை உறுப்பினர் அல்ல என்ற வார்த்தையை பாஜகவைச் சேர்ந்த குஷ்பு பதிவிட்டு இருந்தார்.

 Archive link

Facebook link

Facebook link 

ஆனால், பிரவேஷ் சுக்லாவின் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் அவரின் பாஜக கட்சி உறுப்பினர் அட்டை பதிவிடப்பட்டு இருக்கிறது. மேலும், அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம், சித்தி தொகுதி எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா அருகே இருக்கும் புகைப்படம் மற்றும் பாஜக கூட்டங்களில் கலந்து கொண்ட பல்வேறு புகைப்படங்கள் கிடைத்தன. இதன் மூலம் பிரவேஷ் சுக்லா பாஜகவைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் தன்னுடைய பிரதிநிதி இல்லை என எம்எல்ஏ கேதார்நாத் மறுப்பு தெரிவித்த நிலையில், பிரவேஷ் சுக்லாவின் தந்தை ராமகாந்த் சுக்லா அளித்த பேட்டியில், ” எனது மகன் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி. அதனால்தான் எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுகிறார் ” எனப் பேசியது தொடர்பாக வீடியோ மற்றும் இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
.
முடிவு : 
.
நம் தேடலில், மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் குறித்த பதிவில், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் அவர் பாஜக உறுப்பினர் அல்ல என குஷ்பு கூறிய தகவல் பொய்யானது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லா பாஜக உறுப்பினர் என்பதை அறிய முடிகிறது. 
Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader