திருநெல்வேலி வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என தினமணி வெளியிட்ட மெக்சிகோ வீடியோ
பரவிய செய்தி
நெல்லை வெள்ளம்.. காண்போரை பதறவைக்கும் விடியோ
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 17ம் தேதி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாகப் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
#Dinamani | நெல்லை வெள்ளம்.. காண்போரை பதறவைக்கும் விடியோ#nellai #nellaifloods #nellairains #tirunelveliflood
Watch herehttps://t.co/tx0WkBnRY5 pic.twitter.com/DByUPb9A4d
— தினமணி (@DinamaniDaily) December 25, 2023
இந்நிலையில் திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ ஒன்றினை ‘தினமணி’ செய்தியாகப் பதிவிட்டுள்ளது. மேலும் பலர் அதே வீடியோவை ‘தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆடு மாடுகள்’ என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர்.
*வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஆடு, மாடுகள்*
தூத்துக்குடி மாவட்டம் ஏரல், முக்காணி, புன்னக்காயல் பகுதிகளில் மழை வெள்ளத்தின் காரணமாக தாமரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆடுகள், மாடு pic.twitter.com/nwkhTw9pdp
— Save Tree (@lakshman241082) December 25, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரெம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அது 2020ம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதைக் கண்டறிய முடிந்தது.
இந்த வீடியோவை 2020, ஆகஸ்ட் 25ம் தேதி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘மெக்சிகோ வெள்ளத்தில் பல மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன’ என்றுள்ளது.
இதே போல் ஸ்பானிஷ் மொழியில் இயங்கக் கூடிய ‘uno tv’ என்னும் இணையதளத்திலும் இந்த வீடியோ குறித்த செய்தி 2020, ஜூலை மாதம் வெளியாகியுள்ளது. அச்செய்தியில் கம்போஸ்டெலா (Compostela) என்னும் பகுதியில் உள்ள “எல் கான்சல்” ஆற்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றில் மாடுகள் அடித்துச் செல்வதை வேறு கோணத்தில் எடுத்த வீடியோ ‘Conexão GeoClima’ என்னும் எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் மெக்சிகோ நயாரிட் (Nayarit) பகுதியில் நிகழ்ந்தது என்றுதான் கூறப்பட்டுள்ளது.
MUNDO – Vacas são arrastadas pela enxurrada após alto volume de chuva provocado pelo furacão #Hanna em Compostela, Nayarit, no México.
Las Varas Nayarit pic.twitter.com/CC9jKCb0fF
— Conexão GeoClima (@ConexaoGeoClima) July 27, 2020
2020ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்ததை 2023ம் ஆண்டு திருநெல்வேலி வெள்ளம் எனத் தினமணி தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், திருநெல்வேலி வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோ 2020ம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது.