This article is from Oct 27, 2021

பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என அண்ணாமலை கூறினாரா ?

பரவிய செய்தி

அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது ஏன் ?

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோலை ஆடம்பரப் பொருள் எனக் கூறியதாக அக்கட்சியின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Twitter link | Archive link 

உண்மை என்ன ?

இதுகுறித்து, தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், அக்டோபர் 24-ம் தேதி ” அமைச்சர் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என சொன்னதாக அறிகிறேன். பாஜகவை திமுக தொட்டு பார்க்கட்டும், பாஜக மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம்! ” என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Twitter link | Archive link 

மேற்காணும் பதிவில் இடம்பெற்ற அண்ணாமலை பற்றிய போஸ்டரில் பெட்ரோல் பற்றி எடிட் செய்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : வீடியோவை வைத்து பாஜகவினரை மிரட்டி அண்ணாமலை பணம் பெற்றதாக போலிச் செய்தி !

கடந்த சில நாட்களில், பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி கார்டுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது குறித்தும் பதிவிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : எரிபொருள் விலை உயர்வு என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என அண்ணாமலை கூறியதாக வதந்தி !

முடிவு : 

நம் தேடலில், அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பரப் பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது ஏன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் போஸ்டர் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader