திமுக கூட்டணியில் இருப்பதை விட பாஜகவில் இணைந்து விடலாம் என வன்னி அரசு கூறினாரா ?
பரவிய செய்தி
திமுக கூட்டணியில் இருப்பதை விட பாஜகவில் இணைந்து விடலாம். சமீபகாலமாக திமுகவின் போக்கு கண்டனத்துக்குரியது.. – விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு
மதிப்பீடு
விளக்கம்
விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, திமுக கூட்டணியில் இருப்பதை விட பாஜகவில் இணைந்து விடலாம். சமீபகாலமாக திமுகவின் போக்கு கண்டனத்துக்குரியது எனக் கூறியதாக ABP நாடு செய்தி உடைய நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
ஆனால், செப்டம்பர் 28-ம் தேதி ABP நாடு முகநூல் பக்கத்தில், ” ஊடகவியலாளர்களை இழிவுப்படுத்தி பேசும் ஹெச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் – விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ” என்ற செய்தியே வெளியாகி இருக்கிறது.
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என வன்னி அரசு கூறியதாக வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் கூறினாரா ?
மோரூர் கொடியேற்ற விவகாரம் தொடர்பாக விசிக காவல்துறைக்கு எதிராக கண்டன போராட்டதை அறிவித்தது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுவதாகவும் போலிச் செய்திகள் பரப்பப்பட்டன.
முடிவு :
நம் தேடலில், திமுக கூட்டணியில் இருப்பதை விட பாஜகவில் இணைந்து விடலாம். சமீபகாலமாக திமுகவின் போக்கு கண்டனத்துக்குரியது என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியதாக பரவும் செய்தி போலியானது, அது எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.