பொள்ளாச்சியில் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம்| 9 பேர் கைது !
பரவிய செய்தி
பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம். 16 வயது பள்ளி மாணவியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம். 9 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம் பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ளது.16 வயது பள்ளி மாணவி தன் பாட்டி உடன் பொள்ளாச்சியில் குமரன் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். தன் சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால் மாணவி பாட்டியிடம் வளர்த்து வந்துள்ளார்.
மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் அமானுல்லா எனும் 27 வயது இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இது குறித்து அமானுல்லாவின் நண்பர்களுக்கு தெரிந்த பிறகு, நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பொள்ளாச்சி காவல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்தப்பட்ட விசாரணையில், பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் அமானுல்லா உடன் பகவதி, முகமது அலி, டேவிட் செந்தில், முகமது ரபீக், அருண் நேரு, சையது முகமது, இர்ஷான் முகமது, இர்ஷான் பாட்சா என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், தலைமறைவாகிய பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையடுத்து, போலீஸ் விசாரணையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த குற்றத்தை அமானுல்லா ஒப்புக் கொண்டார். பின்னர், 9 பேரின் மீதும் போஸ்கோ
சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பிறகு அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எத்தனை நிகழ்ந்தாலும் துணிவுடன் பாலியல் கொடுமைகள் கொடுக்கும் கொடூரர்களும் இருந்து கொண்டே உள்ளனர்.