This article is from Feb 04, 2020

ரவீந்திரநாத் குமார் தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடுவதாக வதந்தி !

பரவிய செய்தி

பிரசாந்த் கிஷோர் என்ன யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்பிப்போம் – ரவீந்திரநாத் எம்.பி

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் சார்ந்த சூத்திரங்களை வகுக்கக்கூடிய பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து வருகிற சட்டசபைத் தேர்தலில் செயல்பட இருப்பதாக உறுதியான தகவலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், அதிமுக-வின் தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் குமார், ” பிரசாந்த் கிஷோர் என்ன யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்பிப்போம்” என தெரிவித்து உள்ளதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த செய்தியின் தன்மை குறித்து அறிய தந்தி டிவி செய்தியின் முகநூல் பக்கத்தில் பிப்ரவரி 3-ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆராய்ந்த பொழுது அத்தகவல் போலியானவை என்பதை அறிய முடிந்தது.

பிப்ரவரி 3-ம் தேதி வெளியான உண்மையான நியூஸ் கார்டில், ” தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழில் வாழ்த்து ” என தந்தி செய்தியில் வெளியாகி இருக்கிறது. அதை போட்டோஷாப் செய்து போலியான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

Please complete the required fields.




Back to top button
loader