This article is from Jan 18, 2021

சசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு !

பரவிய செய்தி

திமுகவை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் – குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா நிகழ்வின் போது ஆடிட்டர் குருமூர்த்தி, வீடு பற்றி எரியும் போது கங்கை ஜலத்திற்காக காத்திருக்க முடியாது, சாக்கடை ஜலத்தையும் வாரி வீசலாம் எனும் உதாரணத்தை சசிகலாவைக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுகவை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் என குருமூர்த்தி கூறியதாக புதிய தலைமுறை செய்தியின் எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Facebook link | Archive link

“பாஜக-அதிமுக கூட்டணியில் சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைந்தால் திமுகவைப் போல் அதிமுகவும் குடும்ப கட்சி ஆகிவிடும்” குருமூர்த்தி கூறியதாக வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.

பாஜக-அதிமுக கூட்டணியில் சசிகலா இணைப்பை ஆதரிப்பதாக வெளியான தகவல் குறித்து குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். ” அமமுகவை நான் இன்னும் மன்னார்குடி மாஃபியா என்றே கருதுகிறேன். அவர்கள் பாஜக-அதிமுக கூட்டணியின் அங்கமானால்கூட, சந்திரசாமியை சாக்கடை என்று கருதியதைப் போல, இவர்களை மாஃபியா என்றே கருதுகிறேன் ” என குருமூர்த்தி கூறி இருக்கிறார்.

Please complete the required fields.




Back to top button
loader