திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி சீமான் செய்தியாளர்களிடம் சொன்ன பொய் செய்தி !
பரவிய செய்தி
பாராளுமன்ற உறுப்பினர் செந்தில், பெரியாரை நான் பார்த்ததில்லை.ஆனால் காக்கி சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த பிறகு மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்த மாறி இருக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
மே 22 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை திமுகவினர் விளம்பரப்படுத்துவதை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
அப்போது, ” திமுகவின் எம்.பி செந்தில்குமார், பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால் காக்கி சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த போது மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்த மாறி இருக்கிறது எனக் கூறி உள்ளதாக ” பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
சீமான குறிப்பிட்டது போல் உதயநிதி வடிவில் பெரியாரைப் பார்ப்பதாக பேசியது திமுகவின் தர்மபுரி எம்.பி செந்தில்குமார் அல்ல, ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கமே அதை வெளியிட்டு இருந்துள்ளது.
பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை .
இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ..
இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைக்காவியமாக #நெஞ்சுக்கு_நீதி இருக்கும், உலகளில் பல்வேறு விருதுகளை உறுதியாக வெல்லும்.
— senthil (@Senthillvel79) May 20, 2022
இந்த போலியான ட்விட்டர் பக்கத்தில் மே 20-ம் தேதி,” பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை . இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .. இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைக்காவியமாக நெஞ்சுக்கு நீதி இருக்கும், உலகளில் பல்வேறு விருதுகளை உறுதியாக வெல்லும்” எனப் பதிவாகி இருக்கிறது. இந்த போலி ட்வீட் குறித்து முன்பே நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !
பொய்யர் சீமான் பொய் மட்டும் தான் பேசுவார் என்பதற்கு இது சான்று
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி பேசும் படம் என்று தமிழர்கள் கொண்டாடும் திரைப்பாடம்
ஆனால் நான் பதிவிடாத,
சொல்லாததை கூச்சமே இல்லாமல் சொல்கிறார்அது சரி
குறைந்த பட்சம் மனசாட்சியுடன் பேச இவர் என்ன மானமுள்ள மானிடனா pic.twitter.com/UGrshS9XE9— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 6, 2022
இதுகுறித்து எம்.பி செந்தில்குமார், ” பொய்யர் சீமான் பொய் மட்டும் தான் பேசுவார் என்பதற்கு இது சான்று. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி பேசும் படம் என்று தமிழர்கள் கொண்டாடும் திரைப்படம். ஆனால் நான் பதிவிடாத, சொல்லாததை கூச்சமே இல்லாமல் சொல்கிறார் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால் காக்கி சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த போது மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்த மாறி இருக்கிறது என கூறியதாக சீமான் பேசியது பொய்யான செய்தி, அவர் அப்படி பேசவில்லை என்பதையும் அறிய முடிகிறது.