தென் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுத்ததாகப் பரவும் பொய் !
பரவிய செய்தி
ஒரு சோகமான சூழ்நிலையில் மற்றவர்கள் மனம்கோண சிரிப்பதும், மோசமான வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் செல்பி எடுப்பதும் அரக்கர்களின் மனநிலை; அறிவிலிகள் செயல்.
மதிப்பீடு
விளக்கம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த கனமழை பொழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.
கடந்த ஒருசில நாட்களில் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் சூழ்நிலையில், பல இடங்களில் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகளை கவனித்து வருகின்றார்.
மீட்பு நடவடிக்கைக்கு வரலயாம்.
செல்ஃபி எடுக்கத்தான் வந்ததாம்.
— ADMK Monk (@zeenivazan) December 18, 2023
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த மோசனமான சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுப்பதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண் ராமன் எக்ஸ் பக்கத்தில் இப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதை அதிமுகவைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்துடன் நெல்லையில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 18ம் தேதி கீழ்காணும் பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தென் மாவட்டங்களில் அதிதீவிர கன மழை பெய்துள்ள நிலையில் நெல்லை – தூத்துக்குடி – கன்னியாகுமரி – தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்து வரும் மாண்புமிகு அமைச்சர்கள் – அரசு உயர் அதிகாரிகள் – அலுவலர்களை… pic.twitter.com/8n62fNiRXm
— Udhay (@Udhaystalin) December 18, 2023