அம்மாவை நினைத்து அழும் குழந்தை..!! சிரியாவை சேர்ந்தவரா ?
பரவிய செய்தி
சிரியா தீவிரவாதிகளால் அம்மாவை இழந்த சிறுவனிடம், அம்மாவை இழந்ததால் கவலை உண்டா ? என டிவி நிரூபர் கேட்டதற்கு உலகையே அழ வைக்கும் அந்த சிறுவனின் 24 விநாடி கண்ணீர் பதில்..!!
மதிப்பீடு
சுருக்கம்
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Entertainment Tonight என்ற செய்தி நிறுவனத்தின் சார்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 2015-ம் ஆண்டில் Entertainment Tonight நிரூபர் மீண்டும் பள்ளிக்கு செல்லும் கதையை பற்றி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரு சிறுவனின் அழும் காட்சிகள் அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியது.
விளக்கம்
ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் சிரியாவின் உள்நாட்டு போரில் தாயை இழந்த குழந்தையிடம் இறந்த அம்மாவை நினைத்து கவலை உண்டா ? என டிவி நிரூபர் கேட்டதற்கு அந்த சிறுவன் அழுகும் காட்சிகள் என்ற தலைப்பில் 24 நொடிகள் கொண்ட வீடியோ பதிவு பதிவிடப்பட்டுள்ளது. தமிழ் பக்கத்தில் மட்டும் இந்த வீடியோ ஆயிரம் லைக்குகள், 5 ஆயிரம் ஷேர்களை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Entertainment Tonight என்ற செய்தி நிறுவனத்தின் சார்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 2015-ம் ஆண்டில் Entertainment Tonight நிரூபர் மீண்டும் பள்ளிக்கு செல்லும் கதையை பற்றி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரு சிறுவனின் அழும் காட்சிகள் அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியது.
” Pre.KG செல்லும் 4 வயது சிறுவனிடம் நிரூபர் முதல் நாள் பள்ளி செல்வது பற்றி கேட்கும் பொழுது, உன் அம்மாவை மிஸ் பண்ணுறியா என்று கேட்டதற்கு ” இல்லை ” என்று கூறிய சில நொடியில் அழத் தொடங்கியுள்ளான். இந்த வீடியோ Entertainment Tonight-ன் youtube தளத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது ”
சிறுவன் அழுத காட்சியை மட்டுமே தவறாக நினைத்து சிரியா நாட்டின் போருடன் தொடர்புப்படுத்தி தவறான தகவலை பகிர்ந்து உள்ளனர்.