முதல்வர் ஸ்டாலின் தாம்பரம் மேயரின் குழந்தைக்கு ‘திராவிட மாடல்’ எனப் பெயர் சூட்டியதாகப் பரவும் போலிச் செய்தி
பரவிய செய்தி
தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ‘திராவிட மாடல் “ என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதிப்பீடு
விளக்கம்
தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் அவர்களின் குழந்தைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ” திராவிட மாடல்” எனப் பெயர் சூட்டியதாக ஏபிபி நாடு சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
டிசம்பர் 27ம் தேதி தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போது தாம்பரம் மாநகராட்சி வசந்தகுமாரி கமலக்கண்ணன் கைக் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது அவரின் குழந்தைக்கு ” திராவிட அரசன் ” எனப் பெயர் சூட்டியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடிய போது, டிசம்பர் 27ம் தேதி ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டில், ” தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு திராவிட அரசன் என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” என்றே வெளியாகி இருக்கிறது.
#JUSTIN | தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு திராவிட அரசன் என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCzH82 | #MKStalin #DMK #Tambaram pic.twitter.com/Mbs1vbGB90
— ABP Nadu (@abpnadu) December 27, 2022
ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டில், ” திராவிட அரசன் “ என இடம்பெற்ற இடத்தில் ” திராவிட மாடல் “ எனப் பெயரை மாற்றி எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : முதல்வர் ஸ்டாலின் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா ?
மேலும் படிக்க : முதலமைச்சருக்கு 70 வயது அவரது ஆசிரியருக்கு 68 வயது எனப் பொய் பரப்பும் கிஷோர் கே சாமி !
இதற்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலின் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவு பிறப்பித்ததாகவும், 70 வயதான முதல்வரின் ஆசிரியருக்கு 68 வயது தான் எனப் பொய்கள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ‘திராவிட மாடல் “ எனப் பெயர் சூட்டியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது. முதல்வர் ஸ்டாலின் மேயரின் குழந்தைக்கு திராவிட அரசன் என்றே பெயர் சூட்டி உள்ளார் என அறிய முடிகிறது.