தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏற வேண்டும் என பாஜக நாராயணன் திருப்பதி கூறினாரா ?

பரவிய செய்தி
தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும். கணவன் இறந்தபின் பெண் வாழ்வதில் பயன் இல்லை – நாராயணன் திருப்பதி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ” உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும். கணவன் இறந்தபின் பெண் வாழ்வதில் பயன் இல்லை ” எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும் என பாஜகவின் நாராயணன் திருப்பதி கூறியதாக நியூஸ் 7 தமிழ் சமூக வலைதள பக்கங்களில் எந்த செய்தியும் இடம்பெறவில்லை. அது போலியாக எடிட் செய்யப்பட்ட செய்தி.
நாராயணன் திருப்பதி பற்றி பரவும் செய்தி குறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் அவர்களைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், ” இது போலியான செய்தி ” என பதில் அளித்தார்.
முடிவு :
நம் தேடலில், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும். கணவன் இறந்தபின் பெண் வாழ்வதில் பயன் இல்லை எனக் கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.