கேசவ விநாயகம் உள்பட பாஜகவினர் மது அருந்துவதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், செல்வகுமார் உள்பட பாஜகவினர் மது அருந்திக் கொண்டு அசைவ உணவை சாப்பிடுவதாக இப்புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாடு பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவரான செல்வகுமாரின் ட்விட்டர் பக்கத்தில், ” இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், மாவட்ட தலைவர் பாலாஜி, மற்ற மாவட்ட மண்டல நிர்வாகிகள் எங்கள் வீட்டில் மதிய உணவு எடுத்து கொண்ட பொழுது ” என உணவு அருந்தும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், மாவட்ட தலைவர் @balaji_utham, மற்ற மாவட்ட மண்டல நிர்வாகிகள் எங்கள் வீட்டில் மதிய உணவு எடுத்து கொண்ட பொழுது. pic.twitter.com/zne0vobwWo
— Selva Kumar (@Selvakumar_IN) February 27, 2023
பாஜகவின் கேசவ விநாயகம், கோவை மாவட்ட தலைவர் பாலாஜி, செல்வகுமார் ஆகியோர் உணவு அருந்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மது மற்றும் அசைவ உணவை வைத்து எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மது பாட்டில் எனப் பரப்பப்படும் வதந்தி !
மேலும் படிக்க : ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
இதற்கு முன்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மது பாட்டில் இருப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மது அருந்துவதாகவும் தவறான மற்றும் எடிட் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. அதுகுறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், கேசவ விநாயகம் உள்பட தமிழ்நாடு பாஜகவினர் மது அருந்துவதாகப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.