திமுக அரசு பால் விலையை ரூ.6 உயர்த்தி ரூ.3 ஆக குறைத்ததா ?

பரவிய செய்தி
பால் விற்பனை விலை உயர்வு. விற்பனை விலை 6 ரூபாயில் இருந்து ரூ.3 குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அரசின் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி பொறுப்பேற்ற போது ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்படும் எனும் கோப்பில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், மே 7-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பால் கொள்முதல் விலை உயர்த்தி உள்ளதாகவும், விற்பனை விலையில் 6 ரூபாயாக இருப்பதை 3 ரூபாயாக குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது என முன்னணி செய்தித்தாள்கள், சேனல்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
தமிழக பால்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது,
மேலே படிக்கப்பட்ட அரசாணையில் 19.08.2019 முதல் கீழ்க்கண்டவாறு பால்கொள்முதல் விலை மற்றும் பால் விற்பனை விலையை உயர்த்தி ஆணை வெளியிட்டது. அ.கொள்முதல் விலை : ஒரு லிட்டர் பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28-ல் இருந்து ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது ஒரு லிட்டர் எருமைப்பாலின் தற்போதைய கொள்முதல் விலை ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35-ல் இருந்து ரூ.41 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆ. விற்பனை விலை : அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 மட்டும் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
