3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் பாபாராம்தேவ் படமா ?| அவர் யார் தெரியுமா ?
பரவிய செய்தி
தமிழ்நாடு 3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் பாபாராம்தேவ் !
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பள்ளியில் வழங்கப்பட்ட 3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபாராம்தேவ் உடைய புகைப்படம் பெற்று இருப்பதாக வெளியான ட்வீட் ஒன்றை காண நேரிட்டது.
உண்மையில், சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்று இருப்பது பாபாராம்தேவ் புகைப்படம் அல்ல, வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயர் உடைய புகைப்படமாகும். சுருக்கமாக வ.வே.சு.ஐயர் என அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைக்காக பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும், மொழிப் பெயர்ப்பாளருமான வ.வே.சு.ஐயர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
வ.வே.சு.ஐயரின் புகைப்படத்தை சமூகவியல் பாடப்புத்தகத்தில் பாரதியார் புகைப்படத்திற்கு கீழே இடம்பெறச் செய்துள்ளனர். முனிவர் போன்று தாடியுடன் இருப்பதால் பாபாராம்தேவ் என தவறாக புரிந்து கொண்டு பகிர்ந்து உள்ளனர்.
தமிழ் சிறுகதைகளின் தந்தை என அழைக்கப்படும் வ.வே.சு.ஐயருக்கும், பாபாராம்தேவ்க்கும் வித்தியாசம் தெரியவில்லையா என ட்வீட் பதிவை பகிர்ந்து கிண்டல் செய்யும் பதிவுகளும் பதிவிடப்படுகிறது.