டாடாவின் 150வது ஆண்டு விழாவிற்கு கார் பரிசளிப்பதாக பரவும் வாட்ஸ் அப் வதந்தி !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
டாடா குழுமத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் நினைவாக கார் பரிசை பெறலாம் என வாட்ஸ்அப் ஃபார்வர்டு ஒன்று சுற்றி வருகிறது. இது உண்மையானது அல்ல, மக்களை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட இணையதளமே.
#FakeNotSafe
Tata Group or its companies are not responsible for this promotional activity. Please do not click on the link and/or forward it to others.Know more here: https://t.co/jJNfybI9ww pic.twitter.com/AA38T0oqHn
— Tata Group (@TataCompanies) October 1, 2021
வைரலாகும் தகவல் குறித்து டாடா குழுமம் தன் ட்விட்டர் பக்கத்தில், ” இந்த விளம்பர நடவடிக்கைக்கு டாடா குழுமமோ அல்லது அதன் நிறுவனங்களோ பொறுப்பல்ல. தயவுசெய்து இணைப்பைக் கிளிக் செய்யவோ அல்லது மற்றவர்களுக்கு அனுப்பவும் வேண்டாம் ” என பதிவிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : காதலர் தின பரிசென பரவும் மோசடி லிங்க்.. இதற்கு பின்னால் என்ன நடக்கிறது ?
இதற்கு முன்பாகவும், பரிசுகள் அளிப்பதாக இதுபோன்ற மோசடி ஃபார்வர்டு தகவல்கள் பல பரப்பப்பட்டு இருக்கின்றன. வைரல் செய்யப்படும் லிங்கிற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை மேலே உள்ள கட்டுரையில் விரிவாக படிக்கலாம்.
மேலும் படிக்க : பணம் கிடைக்கும் என நினைத்து கமெண்ட் செய்யும் மக்கள்| ஜாக்கிசான் பெயரில் மோசடி !
முடிவு :
நம் தேடலில், டாடா குழுமத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி கார் பரிசு அளிப்பதாக பரப்பப்படும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல் போலியானது. இதுபோன்ற பரிசு, பணம் சம்பந்தப்பட்ட இணைப்புகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.