ஆசியப் போட்டியில் தலைவாசல் விஜய் மகள் வென்ற வெள்ளிப் பதக்கம்| வைரலாகும் முகநூல் பதிவு !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் அவர்களின் மகள் ஜெயவீணா ஆசியப் போட்டியில் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதாக தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரின் புகைப்படங்கள் அடங்கிய பதிவு ஒன்று முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து இப்பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்ற 13-வது தெற்காசிய போட்டியில் பல நாடுகளில் இருந்தும் போட்டியார்கள் கலந்து கொண்டனர். தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.
தலைவாசல் விஜய் அவர்களின் மகன் ஜெய்வந் விஜய் குமாரும் நீச்சல் விளையாட்டு வீரரே. ராஞ்சியில் நடைபெற்ற 34-வது தேசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் ஜெய்வந் குமார் 4-வது இடத்தைப் பிடித்தார், ஜெயவீணா 4X 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் அணி போட்டியில் தமிழகத்திற்காக வெண்கலம் வென்றார் என குடும்பத்தினர் புகைப்படம் 2011-ம் ஆண்டு Getty image தளத்தில் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு தலைவாசல் விஜய் மகள் தெற்காசிய போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்த செய்திகள் இணையதள செய்திகளில் வெளியாகி இருக்கின்றன. தற்போது ஜெயவீணாவிற்கும், தலைவாசல் விஜய்க்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.